Wednesday, February 20, 2008

கோடி புண்ணியம் செய்த நான்...


உன்னுடனான நெருக்கம்
நீ பிறந்தது முதல்...
சிறு வயதுகளில் உன்னுடன்
சண்டையிட்டிருக்கலாம்
ஆனால் இப்பொழுது...
என் நண்பர்கள் பலர்
உன்னைக் கண்டுப்
பொறாமைப்படும் வேளைகளில்
பெருமிதமாய் உணர்வேன்
என் சந்தோஷ நொடிகளை
பகிர்ந்துக் கொள்ளும்
நண்பனாய் நீ
என் துயர வேளைகள்
தேடும் தாய்மடி நீ
பிள்ளையாய் பாவித்து
என்னைத் தாங்கும்
தந்தை உள்ளம் நீ
சகோதரனாய் பழகும்
நண்பன் கிடைப்பது எளிது
சகோதரனே நண்பனாயிருந்தால்...
ஆயிரம் அண்ணன்களோடு
பிறந்த ஆனந்தம் அடைகிறேன்
தம்பி உன் ஒருவனுக்கு
தமக்கையாய் பிறக்க
கோடி புண்ணியம் செய்த நான்...

16 comments:

Dreamzz said...

aahaa aaahaa .... superu :)

நாமக்கல் சிபி said...

/தம்பி உன் ஒருவனுக்கு
தமக்கையாய் பிறக்க
கோடி புண்ணியம் செய்த நான்//

அக்கா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கோபால் said...

அருமை... அதிஷ்டக்காரங்க‌ ரெண்டு பேருமே

Arunkumar said...

cute n nice

ஜொள்ளுப்பாண்டி said...

இம்சையக்கா..... ன்னு ஓன்னு அழுவனும் போல இருக்கு....

தம்பிக்கு ஒரு கவிதை !! நல்லாதேன் இருக்கு.... :))))

Unknown said...

your brother is a bleesed boy

மணிவேலன் said...

கண்ணுல தண்ணிங்க்கா.....
தம்பிக்கு ஒரு கவிதை...


சந்தோஷம்...

ஜே கே | J K said...

நல்ல தம்பி தான்.

மங்களூர் சிவா said...

//
ஜொள்ளுப்பாண்டி said...
இம்சையக்கா..... ன்னு ஓன்னு அழுவனும் போல இருக்கு....
//
avvvv
repeateyyy

தமிழன்-கறுப்பி... said...

உங்களைப்போல ஒரு அக்கா கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும்
அக்கா.....அக்கா நீ என் கூட பிறக்காம போயிட்டியே... நா என்ன செய்வேன்... ( சிவாயி ஸ்டைலில்)

Divya said...

romba roma nalla iruku kavithai.........ovoru line um rasithein!

ur thambi is so lucky to hv a nice sister like u!!

Anonymous said...

//சகோதரனாய் பழகும்
நண்பன் கிடைப்பது எளிது
சகோதரனே நண்பனாயிருந்தால்...//

101% உண்மை...அனுபவித்தில் சொல்கிறேன்...

Praveena said...

அதிர்ஷடகாரன் உங்கள் தம்பி....அருமையான கவிதை!!!

சுரேகா.. said...

நல்லா சொல்லியிருக்கீங்க!

முதலில்..அண்ணனுக்காக ஒரு பதிவு போட்டீங்களோ?

உங்க தம்பி நல்லா இருக்கணும்..!

வாழ்த்துக்கள்!

கைப்புள்ள said...

//என் துயர வேளைகள்
தேடும் தாய்மடி நீ
பிள்ளையாய் பாவித்து
என்னைத் தாங்கும்
தந்தை உள்ளம் நீ//

இந்த வரிகள் ரொம்ப வித்தியாசமாவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கு. உங்கள் தம்பிக்கும் உங்களுக்கும் இடையேயான அன்பு மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்.

MyFriend said...

தம்பிக்கு எழுதியாச்சு.. தங்கைக்கு எப்போ எழுத போறீங்க? ;-)