Wednesday, February 13, 2008

காதலர் தின வாழ்த்துக்கள்!!!

அப்பாடா! எது வருதோ இல்லையோ வருஷம் ஆனா இது வந்துடுது. சரி எல்லாத்துக்கும் வாழ்த்து போடறோம் இதுக்கும் போட்டுடலாமேனு என் குருவி மூளையப் போட்டு கசக்கிப் பிழிஞ்சு ஏதோ எனக்கு தோணினத எழுதி இருக்கேன். அப்புறம் எல்லாருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!!!

இது எங்க எதிர் கட்சி மக்களுக்கு...




இது எங்க கட்சி மக்களுக்கு...


தேடித் தேடி
வாழ்த்து அட்டை
வாங்க வேண்டும்
தெரிகின்ற அனைத்து
வெப்சைட்டிலிருந்தும்
வாழ்த்து அனுப்ப வேண்டும்
பன்னிரெண்டு மணிக்கு
ஃபோனில் பேச வேண்டும்
எனக்குப் பிடித்ததை
வாங்கித் தரும் உனக்கு
என்ன வாங்க வேண்டுமென்று
குழம்பித் தவிக்க வேண்டும்
என்ன உடை உடுப்பதென்று
உன்னிடம் கேட்க வேண்டும்
எப்போதுப் பார்ப்போம்
என்று ஆவலுடன்
காத்திருக்க வேண்டும்
சண்டை போட்டபடி
ஒன்றாய் உணவருந்த வேண்டும்
அலைகளில் கால் நனைய
உன் கைகோர்த்து
நடக்க வேண்டும்
இப்படி கனவுகள் பல
சுமந்து நானிருக்க
நீ எங்கேடா செல்லம் இருக்க?

20 comments:

C.N.Raj said...

hello yaar ange...

Imsai yoda chellaththai valentines day annaikku kaanoomam.....
yar paarththaalum imasi kitta sollidunga...
illainnaa avunga innoru kavithaiya ezhuthiyuruvanga..jaakkiratahai..

Raj.

மங்களூர் சிவா said...

செல்லம் இங்கதானே என் ஜோப்பில வெச்சிருந்தேன்!!

மங்களூர் சிவா said...

வேணா பி2 ஸ்டேசன்ல ஒரு கம்ப்ளைண்ட் குடுக்கலாமா??

மங்களூர் சிவா said...

டிவில காணாம போனவர்கள் பற்றி அறிவிப்பு குடுக்கலாம்!!!!

ஜே கே | J K said...

சூப்பரா இருக்கு, வாழ்த்துக்கள்

ஜே கே | J K said...

//மங்களூர் சிவா said...
வேணா பி2 ஸ்டேசன்ல ஒரு கம்ப்ளைண்ட் குடுக்கலாமா??//

அட நிம்மதியா இருக்க விடுங்கப்பா...

Anonymous said...

சூப்பர்.....

Dreamzz said...

naan ethirkatchi :)

Dreamzz said...

ena ethirkatchi kavidhaigal ellam superu :)

Dreamzz said...

//செல்லம் இங்கதானே என் ஜோப்பில வெச்சிருந்தேன்!!//
lol! naan koodaa...

ரசிகன் said...

தாங்கலை.. எல்லாரும் நல்லாயிருங்க மக்கா..:P :)))))

மணிவேலன் said...

ஒவ்வொன்றும் அருமை!

வாழ்த்துக்கள் ;))

Anonymous said...

அதென்னமோ தெரியல!!! எல்லாருக்கும் காதலிக்கும் போது கவிதையாய் வருது!!.
அப்புறம் கல்யாணம் ஆனப்புறம் வெறும் காத்து தான் வருது!!

நிவிஷா..... said...

கவிதைகள் நல்லா இருக்கு அக்கா. நான் கூட ஒரு கவிதை எழுதி இருக்கேன்.. நேரம் கிடைக்கும் பொழுது வந்து பாருங்க

நட்போடு
நிவிஷா

நானானி said...

ஒ!fo!
எங்கே பார்த்தாலும் ஒரே இம்சை!!!
அது சரி அந்த ரோஜாக்கள் ஏன் கவுந்தடிச்சு கிடக்கு அவைகளும் நொந்துடிச்சோ?

Mahalingam Nireshkumar said...

Hi Imsai Arasi!

கவிதைகள் நல்லாத்தான் இருக்கு.... வாழ்த்துக்கள்

நீங்க ஏன் அந்த கட்சில போனீங்கள்?


Suresh

ரசிகன் said...

இம்சை.. அதென்ன "எதிர்கட்சி" மக்கள்ஸ்?.. "துணைக் கட்சி","இணைக் கட்சி"மக்கள்ஸ்ன்னு போட்டா குறைஞ்சா போயிருவிங்க:P :))

நவீன் ப்ரகாஷ் said...

விழிப்போர்...
இதழ் தீர்த்தம்..
மூச்சு முட்டுகிறது .... :)))

காதலர் தினத்தில் இப்படியா போர் தொடுப்பது ?? :))))

அழகு அனைத்துமே....

Divya said...

\\இப்படி கனவுகள் பல
சுமந்து நானிருக்க
நீ எங்கேடா செல்லம் இருக்க?\\

kanavugal palikkatum imsai!!

nice kavithais, esply on V-day!!

Anonymous said...

Superb....Welcome 2 my club!!!