Tuesday, February 5, 2008

பாடலாசிரியராக மீண்டும் ஒரு முயற்சி!!!

"Jab we met" படத்துல வர "ye ishq ha" பாட்டு எனக்கு எவ்வளவுப் பிடிக்கும்னு இந்தப் பதிவுல சொல்லியிருந்தேன். அதைக் கேட்டுக் கேட்டு அந்தப் பாட்டுக்கு தமிழ்ல வரிகள் எழுதணும்னு ஆசை வந்துடுச்சு. இன்னைக்கு நான் பண்ணின முயற்சில இதான் வந்துச்சு. நடுவுல கொஞ்சம் மேட்ச் ஆகாத மாதிரி ஒரு ஃபீலிங். என்ன பண்றது. ச்சும்மா ஷா... ஹா... ன்னு பாடி வச்சா இப்படி எழுதவறங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு கொஞ்சம் கூட ஃபீல் பண்ணாம எழுதி வச்சிருக்காங்கப் பாருங்க. இனிமேல் இப்படி எழுதக் கூடாதுனு போராட்டம் நடத்தலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க? சரி அதை விடுங்க. நம்ம பாட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டுப் போங்க. உங்களால முடியும் எழுதுங்க எழுதுங்கன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்கிய பெருமை நம்ம வைதேகியத்தான் சேரும். அதனால உங்களோட அர்ச்சனை எதுவா இருந்தாலும் அவங்களைத்தான் போய் சேரும்(அப்பாடா மி தி எஸ்கேப்பு;))))

------------------------------ooOoo------------------------------





ஏன் என்னுள் புது மாற்றம்
மெலிதாய் ஒரு ஏக்கம்
உன்னை பார்த்ததாலா

ஏன் ஒரு வார்த்தை இல்லையே
துளி அசைவும் இல்லையே
உன்னை பார்த்ததாலா

பார்த்தாயா பார்த்தாயா என்னை
தூறல் விழும் பாலை நிலமாய் நான்
பார்த்தாயா பார்த்தாயா

பார்த்தாயா பார்த்தாயா என்னை
பாடித்திரியும் ஒற்றைக் கிளியாய் நான்

இயல்பாய் வந்தாயே
விழியில் விழுந்தாயே
இதமாய் கொன்றாயே நீ
ஓ அன்பே

சிறு பெண் நானே எவ்வளவு சுமைதான் தாங்குவேன் இங்கு
உனக்குப் புரியாதா
ஆகையால் என் இதயத்தை அன்பே இன்று நீ எடுத்துக் கொள்வாயா

பார்த்தாயா பார்த்தாயா அன்பே நீ
காதல் தீயில் பனியாய் உருகும் உயிரை

கேட்டாயா கேட்டாயா அன்பே நீ
என் மனதின் காதல் ராகங்களை

இயல்பாய் வந்தாயே
விழியில் விழுந்தாயே
இதமாய் கொன்றாயே நீ
ஓ அன்பே

ஏனென்று எனக்கும் தெரியாமல் போனதே
உனது நாய்க்குட்டியானேன் என்று
உனக்காவது புரிந்தால் சொல் அன்பே
ஆயுள் முழுதும் அடிமையாய் நான்

கேட்டாயா கேட்டாயா அன்பே நீ
என்னுள் எரிமலையின் வெடிச்சத்தங்களை

பார்த்தாயா பார்த்தாயா அன்பே நீ
பூந்தோட்டம் இன்று உன் காலடியில்

இயல்பாய் வந்தாயே
விழியில் விழுந்தாயே
இதமாய் கொன்றாயே நீ
ஓ அன்பே

------------------------------ooOoo------------------------------

உங்க கருத்த கொஞ்சம் சொல்லிட்டுப் போங்களேன்... பின்னாடி ஒருவேளை நான் ஒரு பெரிய பாடலாசிரியர் ஆனா (நோட் திஸ் பாயிண்ட்ஸ் "ஒருவேளை", "ஆனால்") என்னை உருவாக்கியப் பெருமை உங்களைச் சேருமில்ல. அந்த நல்லெண்ணைல ச்சே... நல்லெண்ணெத்துல சொன்னேன் ;)))

13 comments:

இம்சை said...

ஜீப்பரு...

அபி அப்பா said...

JUPPAR !! JUUPPAROO JUUPPAR!!!

Anonymous said...

nice translation
-isthri potti

குசும்பன் said...

பாட்டு சூப்பரு, நீங்க ஏன் படத்துக்கு பாட்டு எழுத கூடாது!!!

Dreamzz said...

//உங்க கருத்த கொஞ்சம் சொல்லிட்டுப் போங்களேன்... பின்னாடி ஒருவேளை நான் ஒரு பெரிய பாடலாசிரியர் ஆனா ..
//
intha aasai veraya! enna koduma ithu saravanan!

Dreamzz said...

paatu nalla thaanunga irukku imsai madam :)

ஜி said...

:))) நல்லா இருக்கு...

நிவிஷா..... said...

nalla eludhareenga akka
naanum puthu post pottu irukken.
etti paarunga

natpodu
nivisha

Anonymous said...

உங்கள் தமிழ் சேவை தொடர என் வாழ்த்துகள்... ;))

Athisha said...

மெட்டுக்கு ஏற்ற வரிகள் , பாடலாசிரியர் ஆக வாழ்த்துக்கள் .

அன்புடன் அதிஷா

ஆடுமாடு said...

டிரான்ஸ்லேஷன் ஏக்தம் பராபரேஹ். டீ.கே.

வாழ்த்துகள்

Subramanian Vallinayagam said...

hi imsai arasi,

I am a regular visitor of vettipaiyal and i came to know abt ur blog thru vettipaiyal only.

Ur writing style was superb.Actually i am not visiting serious blogs. I used to read vettipaiyal, dubukku style blogs only. U are also writing in such manner. Especially "Edutha sapatham" was really superb.

Im also workingn IT @ blore.So i met such (hindhiwala)situations.

Then This song - "Ai ishq hai" . I am also gr8 fan of this song even i dont know hindhi.

Good try to translate that into tamil.



keep writing these kind of comedy style blogs.

Anonymous said...

nice....unga;ukku saapiduvathai pola swasipathai pola nadraga eluthavum varugirathu vaalthukkal.....
ananda vikatanlayum try pannalaame sister.
by unga bayangara visiri