Showing posts with label உன் கண்ணோரம் வாழ.... Show all posts
Showing posts with label உன் கண்ணோரம் வாழ.... Show all posts

Monday, November 19, 2007

உன் கண்ணோரம் வாழ... IV

'அய்யோ அவளை மாட்டி விட்டுட்டேனே! என்ன பண்ணப் போறாளோ'

'ச்சே... அவங்கப்பா வேற எதாவது ஃபோன்ல பிரச்சினைனு நினைச்சிருப்பாரு'

'ஒருவேளை அவர் அப்படி நினைக்காம வேற எதும் திங்க் பண்ணினார்னா...'

மனது இரண்டாய் பிரிந்து உட்கார்ந்து பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க அந்த ஏ.சி வால்வோ பஸ் பயணம் அவனுக்கு நெருப்பின் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருந்தது.

அடுத்த நாள் காலையில் ஆபிஸிற்கு கிளம்பி கொண்டிருந்தவன் மொபைல் பாட்டு பாட ஆவலாய் ஓடி சென்று எடுத்தான். ஊரிலிருந்து ஆனால் புதிய நம்பர்... யாராய் இருக்கும்? என்ற கேள்வியுடன் எடுத்து "ஹலோ" என்றான்.

"அண்ணா! நான் உமா பேசறேன்" என்றதும் ஒரு மெல்லிய பதட்டம் உடலில் பரவ

"என்னாச்சு உமா என்னாச்சு? எதாச்சும் பிரச்சினையா?" என்று கேட்டான்.

"அனு நைட் என்கிட்ட பேசினா. நேத்து அப்பாகிட்ட எதோ பேசிட்டிங்களாமே. அவருக்கு எதோ ரொம்ப சந்தேகம் வந்துடுச்சாம். அவ என்ன பண்றான்னு நோட் பண்ணிட்டே இருக்காராம். அவர் தூங்கினதுக்கப்புறம் தெரியாம எனக்கு ஃபோன் பண்ணினா. உங்ககிட்ட இதை சொல்ல சொன்னா" என்றாள்.

"சரி அவள எதும் கவலைப்படாம இருக்க சொல்லு"

"இல்ல அண்ணா. அவ ரொம்ப பயந்துட்டே இருக்கா. நெத்து நைட் ஒரே அழுகை. அந்த பையன் வீட்டுல வேற ரொம்ப ப்ரெஸ் பண்ணி கேக்கறாங்களாம். என்ன ஆகுமோன்னு தெரியலைனு சொல்லி அழுதுட்டே இருக்கா"

இதைக் கேட்டதும் அவன் கண்கள் அவனையும் அறியாமல் தளும்பியது.

"அவகிட்ட நான் இருக்கேன். தைரியமா இருன்னு சொல்ல சொன்னேனு சொல்லு. ரொம்ப தேங்ஸ் மா"

"ஓகே அண்ணா. எதாவது சொல்ல சொன்னா நான் மறுபடியும் ஃபோன் பண்றேன்" என்று ஃபோனை வைத்து விட்டாள்.

நான்கு நாட்கள் என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்று தெரியாமலே நகர்ந்தன. அவனுக்கு வாழ்க்கையே இருண்டு போய் விட்டது போல தோன்றியது. சாப்பிடாமல், தூங்காமல், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சகலத்தையும் தொலைத்தவன் போல திரிந்து கொண்டிருந்தான். வியாழக்கிழமை இரவு வீட்டிற்கு ஃபோன் செய்த போது அம்மாவிடம் பேச்சு வாக்கில் அனு வீட்டை இழுத்து வந்தான்.

"அந்த பொண்ண யாரோ கேட்டுகிட்டே இருக்காங்கன்னு சொன்னீங்களே என்னாச்சும்மா?"

"ஓ! அதுவா.... பாரு மறந்தே போயிட்டேன். அனு அப்பா இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தார்டா. அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். அந்த பையனுக்கு இப்போதைக்கு நிச்சயம் பண்ணிடலாம்னு யோசிச்சிட்டு இருக்காராம். அப்பாவுக்கு தெரிஞ்சவங்கன்றதால கொஞ்சம் இடம் எப்படினு விசாரிக்க சொல்லிட்டு போயிருக்காரு"

இதைக் கேட்டதும் அவனால் ஒன்றுமே பேச முடியவில்லை.

"சரிம்மா. நமக்கெதுக்கு அவங்க பிரச்சினை. நான் சாப்பிட போறேன். அப்புறம் பேசறேன்" என்று வைத்து விட்டு சென்று படுக்கையில் விழுந்தான். அவனது மொபைல் அடிப்பது கூட உணராமல் படுத்தேக் கிடந்தவன் திடீரென்று உணர்வு வந்தவனாய் வேகமாய் எடுத்து பேசினான்.

"தம்பி அப்பா பேசறேன்"

"சொல்லுங்கப்பா"

"சனிக்கிழமை எதாவது வேலை இருக்கா?"

"இல்ல"

"சரி நாளைக்கு கிளம்பி வீட்டுக்கு வா. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்"

"என்ன வி... ஷ... ய...ம்???"

"கிளம்பி வான்னா வா. சரி வைக்கறேன்"

'எதுக்கு அப்பா வர சொல்றார். ஒருவேளை மாமா பேசினது நாந்தான்னு கண்டுபிடிச்சிருப்பாரோ?? அப்பாகிட்ட போட்டு குடுத்திருப்பாரோ???' பயத்தில் நாக்கு உலர்ந்தது.

'அப்பா கேட்டா என்னன்னு சொல்றது. அவர்ட்ட நேர்ல நின்னே பேச மாட்டேனே'

அடுத்த நாள் முழுவதும் இப்படியே யோசனையில் கழிந்தது. அடுத்த நாள் இரவு ஊருக்கு பயணமானான். அடுத்த நாள் காலையில் அப்பா எழுவதற்கு முன் எழுந்து குளித்து கிளம்பி அவரது அழைப்பிற்காக காத்திருக்கலானான். கிளம்பி வந்தவர் அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.

"நம்ம நடேசன் மாமாவோட சின்ன பொண்ணு அனுவ தேரியுமா?"

"ஒரு ரெண்டு மூணு தடவை பாத்திருக்கேன்பா" பயத்தில் நா உலர்ந்தது.

"ஹ்ம்ம்ம். அந்த பொண்ணை நம்ம தங்கவேலு பையனுக்கு கேக்கறாங்களாம். அவங்க அப்பா வந்து அவங்களப் பத்தி விசாரிக்க சொன்னார்"

"சரிங்கப்பா" பயத்திலும் துக்கத்திலும் வார்த்தைகள் தடுமாறின. மனம் அனிச்சையாய் 'ஒருவேளை நம்மளைப் போயி விசாரிக்க சொல்லுறாரோ' என்று எண்ணியது.

"ரொம்ப நல்ல பொண்ணுப்பா. தங்கம். அப்படி பொண்ணு கிடைக்கறதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்" என்றவர் அமைதியாகி அவன் முகத்தை ஆராய்ந்தார். எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் அடுத்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்தான்.

"முன்னாடி இருந்தே எனக்கு ரொம்ப ஆசை. அனுவ உனக்கு கட்டி வச்சு நம்ம வீட்டு மருமகளாக்கிக்கணும்னு. நான் கேட்டா பதிலேதும் பேசாம சரின்னு சொல்லிடுவார். இருந்தாலும் உன் வாழ்க்கை. உன்னை கேக்காம நான் முடிவு பண்ணக் கூடாதுனு தான் நேத்து அவர்கிட்ட எதுவும் பேசலை. இனி உன் பதில்லதான் இருக்கு"

'ஆஹா! கரும்பு தின்ன கூலியா??!!! நம்ம பிரச்சினை இப்படி அல்வா சாப்பிடற மாதிரி முடியும்னு நினைக்கவே இல்லையே! கடவுளே!! ரொம்ப ரொம்ப நன்றி' மனம் குதியாட்டம் போட முகம் அதை வெளிக்காட்டாமல்

"உங்க இஷ்டம் எப்படியோ அப்படியே பண்ணுங்கப்பா. உங்க முடிவு எதுவாயிருந்தாலும் எனக்கு சம்மதம்" என்று நல்ல பிள்ளையாய் அவன் நடிக்கவும் அவர் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

வேறென்னங்க? நிச்சயம் ஆகி இந்த ஜோடி கல்யாணத்துக்கு காத்துட்டு இருக்கு. அநேகமா அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருவாங்க. என்னடா இதுனு பாக்கறீங்களா?? இதுல வர நிகழ்ச்சிகள் என் கூட வேலை பார்க்கும் நண்பர் ஒருவரோடது. அவரை பாக்கும்போதெல்லாம் எனக்கு காதல் மேல ஒரு மரியாதையே வரும். அதனால இந்த தொடர் நாலும் அவரோட காதலுக்கு சமர்ப்பணம் :)))

--சுபம்...

Tuesday, November 13, 2007

உன் கண்ணோரம் வாழ... III

"டேய்! ஏண்டா என் உயிர எடுக்கற?" அழாத குறையாய் சொன்ன ராமிடம் கெஞ்சினான் அரவிந்த்.

"ப்ளீஸ்டா. நான் அப்புறம் எப்படி அவகிட்ட பேசுவேன். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா"

"டேய் உனக்கே இது அநியாயமா தெரியலை. எனக்கு கால் பண்ணி நான் அட்டெண்ட் பண்ணின உடனே ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கற வாய்ஸ போட்டு விடற. அது உடனே போடறியா இல்ல லேட் ஆகுதானு சொல்ல சொல்லி உயிர வாங்குற. நெனைச்சு பாருடா. மூணு நாளா ஃபோனும் கையுமா உக்காந்திருக்கேன். என்னைப் பாத்தா உனக்கு பாவமா தெரியலையா?" பரிதாபமாய் அவன் சொல்லவும் என்ன செய்வதென்று திரும்பியவன் கண்களில் விழுந்த சந்துரு வேக வேகமாய்

"மச்சான் நான் வெளில கிளம்பறேண்டா. பை" என்று சொல்லி விட்டு எஸ் ஆகிவிட்டான்.

"சரிடா. இதுவரைக்கும் ப்ராக்டிஸ் பண்ணினத வச்சு இன்னைக்கு டெஸ்ட் பண்றேன்" என்றபடி ஹெட்ஃபோனை எடுத்து காதில் மாட்ட ஆர்வமான ராம் அவன் அருகில் வண்து அமர்ந்தான்.

ரிங் போக ஆரம்பித்ததும் ஒரு இனம் புரியாத பயம் எழுந்து வயிற்றை பிசைய அவஸ்தையாய் நெளிந்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போல அனுவின் அம்மா ஃபோன் எடுக்கவும் வேக வேகமாய் வேலை செய்து ரெக்கார்ட் செய்து வைத்திருந்ததை போட்டு விட்டான். அவளது அம்மாவும்

"ஒரு நிமிஷம் இரும்மா. கூப்பிடறேன்" என்று கூறி அவளை அழைத்து ஃபோனைக் கொடுத்தார்.

"ஹே உமா... வீட்டுக்கு போயிட்டியாடி?" என்று வழக்கமான தோரணையில் ஆரம்பித்தவளிடம்

"ஏ அனு... உமா இல்ல. நான்தான் அரவிந்த்" என்று சொன்னதும் வாயைப் பிளந்தவள் அருகிலிருந்த தாயைக் கண்டதும் அமைதியாய்

"ஹ்ம்ம்ம்... சொல்லுடி... ஓ அன்னைக்கு இன்ட்ரோ பண்ணினியே அந்த அக்காவா... சரி..." என்றாள்.

"எப்படி இருக்க?"

"நான் இங்க நல்லா இருக்கேங்கக்கா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுக்கு வேலை எல்லாம் எப்படி போகுது?"

"வேலை எங்க போகுது? எப்போ பார்த்தாலும் உன் நினைப்பாவே இருக்கு" என்று வேதனையாய் சொன்னவன் சட்டெனத் திரும்பி பார்த்தான். அவனை ஆர்வமாய் கவனித்தபடி அருகிலிருந்த ராமை முறைத்தபடி எழுந்து அறைக்குள் சென்று அமர்ந்தான்.

"அதெல்லாம் ஒண்ணும் நினைக்காதிங்கக்கா. நல்லா பண்ணுங்க. உடம்ப பாத்துக்கங்க. போன தடவைப் பாத்தப்பவே கொஞ்சம் இளைச்சுப் போயிருந்தீங்க"

"சரி அதை விடு... அங்க எதும் பிரச்சினை இல்லையெ. வீட்டுல திரும்ப எதாவது அந்த பையன் மேட்டர் பத்தி பேசினாங்களா?"

"காலெஜ்ல எந்த பிரச்சினையும் இல்லாம போயிட்டு இருக்கு. எங்க லெக்சரர் திரும்ப அந்த செமினார் பத்தி எதுமே பேசலை. நீங்க எதும் வொரி பண்ணிக்காதீங்க" என்றவள் பார்வையில் அவள் அம்மா அந்த இடத்தை விட்டு செல்வது விழுந்ததும் சத்தத்தை குறைத்து ஹஸ்கி வாய்ஸில்

"மாமா இங்க எதும் பிரச்சினை இல்ல. ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்க. சரி அம்மா உமா பேசறானு சொன்னாங்க" என்று ஆச்சரியமாய் கேட்டாள்.

"அன்னைக்கு உமாவ பேச சொல்லி ரெக்கார்ட் பண்ணி வச்சேன் இல்ல. அதை யூஸ் பண்ணி பண்ணினேன். இனிமேல் சாயந்திரம் இதே நேரத்துக்கு ஃபோன் பண்றேன். நீயே வந்து எடு"

"ஹ்ம்ம்ம்.... பெரிய ஆள் தான் நீங்க... சரி எப்பொ ஊருக்கு வரீங்க?"

"இந்த வாரம் சனி ஞாயிறு வரேன். உன்னை பாக்க முடியுமா?"

"ரொம்ப கஷ்டம். வர சனிக்கிழமை உங்க வீட்டுக்கு வரணும்னு எங்கப்பாவும் பெரியப்பாவும் சொல்லிட்டு இருந்தாங்களே"

"என்ன விஷயமாம்?"

"தெரியலை.... சரி சரி.... அம்மா வராங்கனு நினைக்கறேன். நாளைக்கு பேசுங்க. இல்லைனா இவ்ளோ நேரம் பேசறேனு சந்தேகம் வந்துடும்"

"சரி. பை டா"

"பை மாமா" என்று ஃபோனை வைத்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். உலகத்தையே புரட்டி காலடியில் போட்ட களிப்பு முகத்தில் தெரிந்தது.

--------------------------------------

சனிக்கிழமை...

வழக்கமான நேரத்தில் ஃபோன் அடிக்கவும் ஓடி சென்று ஃபோனை எடுத்தாள் அனு.

"உங்கப்பாவும் பெரியப்பாவும் கிளம்பிட்டாங்க. காருக்கு பின்னாடி அந்த நம்பர் ப்ளேட்டுக்கு மேல ஒரு தகடு இருக்கு இல்ல. அதுக்குள்ள ஒரு கீசெயின் செல்லோ டேப் போட்டு ஒட்டி வச்சிருக்கேன். எடுத்துக்கோ. பாத்து பத்திரமா எடு"

"சரி. வந்துட்டாங்க. ஒரு கால் மணி நேரம் கழிச்சு ஃபோன் பண்ணுங்க" என்று வைத்தவள் ஆவலாய் வாசலுக்கு ஓடினாள். படியேறி வந்த தந்தை அவள் தலையில் கைவைத்து முன் முடியை சிலுப்பி விட்டு புன்னகைத்தபடி உள்ளே சென்றதும் காரிடம் ஓடினாள். அவன் சொன்ன இடத்தில் இருந்து கீசெயினை எடுத்தவள் அதை இமைக்காமல் அப்படியே பார்த்தாள். ஒரு சதுர வடிவ கண்ணாடி போன்ற பொருளில் அவனது படம் செதுக்கியது போல இருந்தது. மனம் உற்சாகத்தில் துள்ள வேகமாக உள்ளே ஓடினாள். அங்கே அவளது தந்தை ரிசீவரை கையில் வைத்துக் கொண்டு

"உமாவா? எப்படிம்மா இருக்க?" என்று கேட்டுக் கொண்டிருக்க அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

"அவளை கூப்பிடறேன். ஏன் அப்பாகிட்ட பேச மாட்டியா" என்றவருக்கு வந்த பதிலில் ஏதோ பிடிபட திரும்பி பார்த்தவர் மகள் பேயடித்தது போல நிற்பதை கண்டதும் மீண்டும் வேகமாக

"எங்கம்மா இருக்க இப்போ?" என்று கேட்கவும் மறுமுனை உடனடியாய் துண்டிக்கப்பட்டது. அதை வைத்து விட்டு திரும்பியவர் பார்வையில் பயத்தில் அவசர அவசரமாய் உள்ளே ஓடிய அனு பட்டதும், ஏதோ புரிந்தவராய் முகம் சுருக்கினார்.

தொடரும்...

Thursday, October 25, 2007

உன் கண்ணோரம் வாழ... II



அரவிந்த் வேக வேகமாய் அந்த பேப்பரை பிரித்துப் பார்த்தான். ஒரு பெரிய மளிகை லிஸ்ட்டுக்கான பில் இருந்தது. அதைப் பார்த்ததும் ஒரு நொடி ஏமாற்றமடைந்தவன் அடுத்த வினாடியே குழப்பமாய் 'இதை எதுக்கு குடுத்து விட்டிருக்கா' என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு சென்று அதையெ ஒரு பத்து தடவை திருப்பி திருப்பி பார்த்தான். பின் ஒவ்வொரு வரியாக உற்று பார்த்தபோது 'முருகன் ஸ்டோர்ஸ்' என்ற கடைப்பெயரில் முருகன் என்ற வார்த்தையின் அடியில் மெலிதாய் ஒரு கோடு இருந்தது. பிறகு வேக வேகமாய் ஒவ்வொரு வார்த்தையாய் பார்த்த போது அன்றைய தேதியின் அடியிலும், 7'O clock என்பதன் அடியிலும் கோடுகள் இருந்தன. ஏதோ புரிந்தது போல் இருக்கவும் ஒருவித நிம்மதியுடன் 7 மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

மாலை ஆறு மணி ஆனதும் கிளம்ப ஆரம்பித்தவன் ஒருவித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் ஆறரை மணிக்கு முருகன் கோவிலுக்குள் இருந்தான். அவனுக்கிருந்த பதட்டத்தில் நேரம் நகராமல் அடம் பிடிப்பதாய் தோன்ற, கடிகாரத்தை எதிரியாய் பாவித்து சபித்துக் கொண்டிருந்தான். புதன் கிழமையாதலால் அவ்வளவாய் கூட்டம் இல்லை. அவ்வபோது ஓரிருவர் வந்து கொண்டிருந்தனர். அப்படியே கோவிலில் பின்னாலிருந்த மரங்களினடியில் உலாவிக் கொண்டிருந்தவன் ஏழு மணியாகியும் அவள் வராததால் ஒருவித ஏமாற்றமடைந்து ஒரு மரத்தினடியில் உட்கார்ந்தான். எதுக்கு வரச் சொன்னா. என்ன சொல்லப் போறா. இன்னும் ஏன் வரலை இப்படியாய் கேள்விகள் எழும்பிக் கொண்டிருக்க பொறுமை இழந்தவனாய் எழுந்து வேகமாய் திரும்பியவன் அங்கே நின்று கொண்டிருந்த அனுவைக் கண்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் சுதாரித்தான்.

"என்ன மாமா? ரொம்ப நேரமா யாருக்கோ வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க போல? யாருக்குனு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டு களுக்கென்று சிரித்தாள்.

என்ன இவ வர சொல்லிட்டு இப்படி கேக்கறா... அப்போ இவ வர சொல்லலையோ என்று உள்ளே பலவாறு எண்ணங்கள் ஓட, ஏதும் பதில் பேசாமல் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான்.

"நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே" என்று அவள் அவனை உற்றுப் பார்க்கவும் "விளையாடாத அனு" என்று கோபமாய் சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

"அப்போ நீ வர சொல்லிதான் வந்தேன். உனக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு தொரையால சொல்ல முடியாதோ?" என்று அவள் கேலியாய் கேட்கவும் உள்ளுக்குள் பொங்கிய சந்தோஷத்தை வெளியில் காட்டாமல் நடையை நிறுத்தி அவளைப் பார்த்தான்.

"சும்மா எதுக்கு மாமா வெக்கப்படறீங்க?" என்று கேட்டபடியே கீழே குனிந்து அவன் காலடியில் ஏதோ தேடினாள். ஒரு அடி பின்னால் நகர்ந்தவன் "என்ன தேடற?" என்றான்.

"இல்ல தரைல கால் கட்டை விரலால நீங்க போட்ட கோலம் எப்டி இருக்குனு பாக்கலாம்னு பாத்தா.... ச்சே.... இங்க அவ்வளவா வெளிச்சம் பத்தலை" என்று அவள் கேலியாய் சலித்துக் கொள்ள அவனுக்கு சுருசுருவென ஏறியது. "ஏய்" என்றபடி அவன் அனுவின் கையைப் பற்ற வேகமாய் அவனது கையை தட்டி விட்டாள்.

"இந்த வேகத்தை என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல காட்டுங்க மாமா" என்று சீரியஸாய் சொல்லி விட்டு அமைதியாய் திரும்பி போய் மரத்தடியில் அமர்ந்தாள். 'ஆஹா... வேறெதற்கு? உன் கரம் பற்றத்தானே பெண்ணே இப்பிறவியெடுத்து வந்தேன்' என்று கவிதைத்தனமாய் அவனுக்குள் சந்தோஷம் துள்ள மெல்ல சென்று அவளருகில் அமர்ந்தான். தலை குனிந்து புற்களில் கைகளை அளைந்து கொண்டிருந்தவளை அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு யாருமில்லாத தீவுக்கு ஓடி விட வேண்டும் போல தோன்றியது.

"அனு" என்ற அவனது அழைப்பிற்கு லேசாய் தலை நிமிர்ந்து பார்த்தவளது விழிகள் பனித்திருந்தன.

"இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்படி ஃபீல் பண்ணிட்டு உக்காந்திருக்க?" என்று புதிதாய் வந்து விட்ட தைரியத்தோடு கேட்டான்.

"நான் வந்து பேசினப்ப நீங்க இமைக்காம பாத்தப்பவோ, நீங்க என் தம்பிகிட்ட சாக்லேட் வாங்கி கொடுத்து என்னை பத்தி விசாரிச்சத அவன் என்கிட்ட சொன்னப்பவோ அந்த வயசுல எனக்கு எதுவும் தோணலை மாமா. ஆனா எனக்கு அடிக்கடி அது ஞாபகம் வரும். ஏன்னே தெரியாம ரொம்ப சந்தோஷமா இருக்கும். பின்னாடிதான் அந்த சந்தோஷத்துக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சது. எனக்குள்ள நீங்க எப்பவோ வந்துட்டிங்க. அதே மாதிரி நானும் உங்களுக்குள்ள இருக்கேனு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ எனக்கு மாப்பிள்ளை வந்திருக்கிற விஷயம் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அதான் இனியும் உங்ககிட்ட பேசாம இருக்க கூடாதுனு முடிவு பண்ணி இப்போ வர சொன்னேன்" என்று நிறுத்தாமல் அவள் பேசி முடித்தாள்.

"அது எப்படி நானும் உன்னை விரும்பறேனு உனக்கு தெரியும்? நான் எப்போவாவது சொன்னேனா?" என்று அவன் கேட்கவும் ஒரு நொடி திகைத்து விழித்தவள் பின் புன்னகையுடன்

"மாமா ஒண்ணு மொதல்ல தெரிஞ்சுக்கோங்க. என்னைக்கும் பசங்களுக்குதான் இந்த மாதிரி விஷயங்களை புரிஞ்சிக்க முடியாது. ஆனா பொண்ணுங்க பார்வைய வச்சே கண்டுபிடிச்சிடுவாங்க. அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நீங்க என்னையே பாத்துட்டு இருந்ததுதான் எனக்கு தெரியுமே. நீங்க வந்து பேசினப்போ ஏதாச்சும் சொல்லுவிங்கனு எவ்வளவு ஆசையாப் பாத்தேன் தெரியுமா? நீங்க என்னடான்னா ஷாக் அடிச்ச மாதிரி பேந்த பேந்த முழிச்சிட்டு பயங்கரமா உளறுனீங்க. அந்த உளறல் பத்தாதா உங்க மனசு புரிய. அப்போ என்னை கவனிச்சு இருந்திருந்தா உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்" என்றாள்.

'அடடா... இவ்வளவு நாளா இது தெரியம போச்சே' என்று நொந்து கொண்டவன் "சரி அதெல்லாம் இருக்கட்டும். இனிமேல் என்ன பண்றது?" என்று கேட்டான்.

"எப்படியும் அக்காவுக்கு முடியாம எனக்கு பண்ண மாட்டாங்க. அதனால பிரச்சினை இல்லன்னு நினைக்கறேன்"

"ஆனா இப்போதைக்கு நிச்சயம் மட்டும் பண்றதா அம்மா சொன்னாங்களே"

"இப்போதைக்கு பண்ண மாட்டாங்க மாமா. ஏனா இன்னும் ஒரு வாரத்துல ஆடி மாசம் வரப் போகுது. ஆடில எதுமே செய்ய மாட்டாங்க. அதனால ஒரு மாசத்துக்கு கவலை இல்ல. அதுக்குள்ள எப்படியாவது அப்பாவ கன்வின்ஸ் பண்ணி அக்கா கல்யாணத்துக்கு அப்புறமா பாத்துக்கலாம்னு சொல்லணும். அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க பயப்படாதீங்க"

"ஹ்ம்ம்ம்ம். சரி உன்கிட்ட நான் எப்படி பேச முடியும்?"

"எனக்கு காலேஜ் முடிய இன்னும் ஒரு செம் இருக்கு. ஆனா காலேஜ்ல இருந்து பண்ண முடியாது. அப்பாதான் என்னை கூட்டிட்டு போய் விட்டுட்டு ஈவ்னிங் திரும்ப கூட்டிட்டு வருவார். சோ அப்போ கால் பண்ண முடியாது. வீட்டுல யாரும் இல்லைனா உங்களுக்கு கால் பண்றேன்.வேற ஒண்ணும் பண்ண முடியாது" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே

"அனு... லேட் ஆச்சுடி... கிளம்பலாமா?" என்று கேட்டபடி ஒரு பெண் வர

"மாமா. இவதான் என் க்ளோஸ் ஃப்ரெண்ட் உமா. நம்ம ஆளு யாராவது வந்துடுவாங்களோனு நான் தான் பாத்துக்க சொல்லிட்டு வந்திருந்தேன். நேரமாச்சு. நான் கிளம்பவா?" என்று அவள் எழுந்திருக்க அவனுக்கு பளீரென ஒரு ஐடியா தோன்றியது.

"ஹாய் உமா" என்று அவளைப் பார்த்து புன்னகைக்க

"ஹாய் அண்ணா" என்று புன்னகைத்தாள் பதிலுக்கு.

"இவளுக்கு ஃபோன் பண்ணி இவ அம்மா எடுத்தா எப்படி பேசுவ?" என்றான். அவர்கள் இருவரும் புரியாமல் குழப்பமாய் பார்க்கவும்

"சொல்லு நான் சொல்றேன்" என்றான்.

"அம்மா உமா பேசறேன். அனுவ கூப்பிடுங்கனு சொல்லுவேன்"

"இப்போ ஃபோன் பண்ணி அவங்க அம்மாகிட்ட பேசற மாதிரியே பேசணும் சரியா" என்று கூறியபடி அவன் மொபைலில் எதையோ செய்து விட்டு அவளருகில் நீட்ட அவள்

"அம்மா உமா பேசறேன். அனுவ கூப்பிடுங்கம்மா" என்றதும் மறுபடியும் மொபைலில் எதோ செய்தான்.

"அவ அம்மா அவ இல்லைனு சொன்னதும் எப்டி சொல்லுவியோ அதையும் சொல்லு" என்று மறுபடியும் அவளருகில் நீட்டினான்.

"சரிங்கம்மா. நான் ஃபோன் பண்ணினேனு அவகிட்ட சொல்லிடுங்க. வச்சிடறேன்" என்று அவள் முடித்ததும் மொபைலில் எதோ செய்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் உமா. சரி நேரமாச்சு நீங்க கிளம்புங்க" என்றதும் அவர்கள் கிளம்ப அவர்கள் போவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் கிளம்பி வீட்டிற்கு சென்றான். ஏதோ சாதித்து விட்டதாய் தோன்ற உலகத்தையே புரட்டி காலடியில் போட்ட சந்தோஷத்துடன் நிம்மதியாய் சாப்பிட்டு உறங்க சென்றான். உறக்கம் வராமல் புரண்டவன் 'ஒருவேளை அவளால சமாதானப் படுத்த முடியாம போய் அவ அப்பா நிச்சயம் பண்ணிட்டார்னா???' என்ற கேள்வி கண்முன் நிற்க மறுபடியும் நிம்மதியை தொலைத்தவனான்.

தொடரும்...

Wednesday, October 17, 2007

உன் கண்ணோரம் வாழ... I



"நம்ம லட்சுமி பொண்ணு அனுவ பொண்ணு கேட்டு வந்திருக்காங்களாம்" என்று அம்மா அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டு திடுக்கிட்டு விழித்தான் அரவிந்த். 'அனு... என் உயிரின் ஒவ்வொரு அணுவிலும் காதலை பிழிந்து பிழிந்து ஊற்றியவளே!' மனதில் மலைபோல் பாரம் அழுத்த, கண்களை விடாப்பிடியாய் தழுவியிருந்த தூக்கம் பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடியதில் அமைதியாய் எழுந்து அமர்ந்தான். ரெட்டை சடை பின்னலுடனும், பட்டாம்பூச்சியாய் துறுதுறுவென இமையடித்த விழிகளுடனும், குழந்தைதனம் மாறாத முகத்துடனும் பாவாடை சட்டையில் முதல் முதலாய் பார்த்த அவள் உருவத்தை கண்களுக்குள்ளேயே ஒளித்து வைத்திருந்தான். ஒளிந்திருந்தவள் வெளியே வந்து பழிப்பு காட்டி சிரிக்கவும் என்னை விட்டு வெளியே ஓடி விடாதே என்று வாய் விட்டு சொன்னவன் அங்கே வந்த அவளது அக்கா ஒரு மாதிரியாய் பார்க்கவும் திரும்ப படுத்து போர்வையை போட்டு முகத்தை மூடிக் கொண்டான்.

"ஹே என்னடா இது நாம எப்படி விளையாடினாலும் தோத்து போறோம்" என்று தனது தம்பியிடம் புலம்பிய அரவிந்த் வெறுப்பாய் எதிரணியை பார்த்தான். விடுமுறையில் தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த அரவிந்தின் சொந்தத்திற்கும் அத்தை வழி உறவினர் சிலருக்கும் நடந்த விளையாட்டில் தோற்று போனது அவனுக்கு பெரிய மானப் பிரச்சினையாய் இருந்தது. அவனது குழுவில் ஒன்பதாவது படிக்கின்ற அவன் பெரிய பிள்ளையல்லவா... சலித்து போய் மரத்தடியில் தனியாய் அமர்ந்திருந்த அவன் அருகில் நிழலாட நிமிர்ந்துப் பார்த்தான். ஒரு சிறு பெண் நின்றிருப்பதை கண்டதும் யாராயிருக்கும் என்ற யோசனையில் இறங்க, அவனை பார்த்து புன்னகைத்தவள் "அவங்க உங்களை ஏமாத்தறாங்க..." என்று ஆரம்பித்து அவர்கள் செய்த திருட்டு வேலைகளை எல்லாம் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் பார்வையோ படபடவென அடித்த அந்த கள்ளமில்லா விழிகளிலேயெ நிலைத்திருக்க, "எங்க சொந்தமாயிருந்தாலும் தப்பு தப்புதானே. அதான் உங்ககிட்ட சொன்னேன். பாத்து விளையாடுங்க" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு பறந்தாள். அவள் பெயர் அனு. ஆறாவது வகுப்பு முடித்து ஏழாவது போகிறாள். அவனது அத்தையின் அக்கா மகள் என்ற அவளைப் பற்றிய விவரங்களை அவளது சித்தி பையனுக்கு சாக்லேட் வாங்கி தந்து தெரிந்து கொண்டான். அன்று மனதில் போட்டு பூட்டி வைத்தவளை அதற்கு பிறகு பார்க்கவே முடியவில்லை.

காலேஜ் நான்காவது வருடத்திலிருந்த போது ஒரு திருமணத்தில் அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பாவாடை தாவணியில் அவனது கண்களுக்கு தேவதையாய் தெரிந்தாள். வளர்ந்த பிறகும் முகத்தில் மாறதிருந்த குழந்தைதனமும் கவிதை பேசும் கண்களும் அவனது இதயம் துடிப்பது அவளுக்காக மட்டும் தான் என்றே அவனை எண்ன வைத்தது. அவள் கண்களுக்குள் புதைந்து விட துடித்தான். அவளை தனது இதயத்துக்குள் புதைத்துக் கொள்ள தவித்தான். டைனிங் ஹாலுக்கு வெளியே தனியாய் அவள் நின்று கொண்டிருந்ததை கண்டதும் அவளிடம் சென்று காதலை சொல்லி விட துடித்த இதயத்தை கட்டுபடுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
"ஹாய்.... என்னை..." என்று அவன் ஆரம்பிக்கவும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவளது புன்னகையில் உள்ளுக்குள் உற்சாகம் பீறிட

"என்னை.... என்னை...." என்று ஆரம்பிக்கவும் என்ன சொல்ல வருகிறான் என்ற யோசனையில் அவள் புருவம் சுருக்கி யோசனையாய் லேசாய் தலை சாய்த்து அவனை பார்த்தாள். அந்த பார்வையில் அவனது உலகம் சுற்ற உள்ளுக்குள் மயங்கியவனின் வாய் குழற

"நீங்க... நீங்க... தெரி... யு... தா.... யாரு.... னு...." என்று உளறவும் கலகலவென சிரித்தவள்

"என்ன இப்படி கேட்டுட்டிங்க? அரவிந்த் மாமாதானே.... நல்லா தெரியுது" என்று கூறி விட்டு ஒரு வெட்கப் புன்னகையுடன் அங்கிருந்து ஓடி விட்டாள்.

'அடச்சே! நல்ல சான்ஸ கெடுத்திட்டியேடா' என்று தன்னைதானே கடிந்து கொண்டாலும் மனம் என்னவோ அவளது பதிலில் ஆனந்த கூத்தாடியது. அதன் பிறகு அவளைப் பார்க்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவே இல்லை. எப்போதாவது அவளது படிப்பு பற்றியும் வீட்டை பற்றியும் அவனது வீட்டில் பேசிக் கொள்வதை வைத்து அவளைப் பற்றி தெரிந்து கொண்டான். படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் அவளது கல்யாணப் பேச்சு அடிபட, வலிக்காமல் இதயம் திருடிப் போனவளை எண்ணி மனம் வலியால் துடித்தது.

"உங்களுக்கு எப்படிம்மா தெரியும்? பையன் யாராம்?" என்ற அக்காவின் வார்த்தைகள் காதில் விழ அவர்களது பேச்சில் கவனமானான்.

"நேத்து உங்க அத்தை ஃபோன் பண்ணியிருந்தப்ப சொன்னா. ஒரு ஜாதகம் வந்திருந்திருக்கு. அந்த பையனோட அம்மா கடைவீதில அனுவ பாத்திருப்பாங்க போல. ரொம்ப பிடிச்சுப் போச்சாம்."

"ஹிம், அவ அக்காவுக்கே இன்னும் கல்யாணம் முடியலை? அதுக்குள்ளே இவளையும் கேட்க ஆரபிச்சிட்டாங்களா?"

"பெரியவளுக்கு பாக்கறதாதான் இருந்தாங்களாம். ஆனா அவளை விட அவங்களுக்கு அனுவே தான் பார்த்ததும் பிடிச்சிக்கிருச்சாம், கொடுத்தா சின்ன பொண்ணதான் கொடுங்கன்னு கேக்கறாங்களாம்" என்று அம்மா சொன்னதும் அந்த பையனின் அம்மா மீது அவனுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. கடைவீதிக்கு போனோமா வந்தோமானு இல்லாம அந்த அம்மாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம் என்று சொல்லத் துடித்த வாயை அடக்கிக் கொண்டிருந்தான். சரி நம்ம அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்தானே. எப்படியாவது அம்மாவை கன்வின்ஸ் பண்ணி வேலைய முடிக்கணும் என்று எண்ணி கொண்டிருக்கையில்,

"அட அப்பிடியா! ரொம்ப அதிர்ஷடகாரி தான் அனு...."ன்னு அக்கா சொல்லி சிரித்தாள்.

"ஆமாண்டி, அவ நல்ல அதிர்ஷடகாரிதான். ரொம்ப நல்ல இடமாம். வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சாம். பேசாம இப்ப நிச்சயம் மட்டும் பண்ணிக்கிட்டு பெரியவ கல்யாணம் முடிஞ்சதும் இவளுக்கு பண்ணிடலாம்னு நானும் சொன்னேன்."

"அப்போ அவ அக்காவுக்கு எப்போ முடிக்கிறமாதிரியாம்?"

"கூடிய சீக்கிரத்திலே அவளுக்கு முடிச்சிட்டுதான் அனுவுக்கு முடிக்கனுமின்னு இருக்காங்களாம். அது இவங்களும் அந்த வீட்டிலே நிச்சயதார்த்தம் பண்ணப் போறதா இருக்காங்கன்னு அவளும் சொன்னா. நல்ல இடத்தை விட்டுட்டா அப்புறம் நல்லபடியா அமையுமோ அமையாதோ. எதுக்கு பிரச்சினை" என்ற தாயின் வார்த்தைகள் அவனுக்குள் ஈட்டி இறக்க என்ன செய்வதென்று அறியாமல் தொய்ந்து விழுந்தான்.

ஒரு மணி நேரமாய் யோசித்தும் என்ன செய்வதென்று எதும் பிடிபடாத நிலையில் கிளம்பி டீக்கடைக்கு சென்றான். டீ சொல்லி விட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவனது கண்ணில் தூரத்தில் நின்று இவனையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் விழ, யாராய் இருக்கும் என்று வேக வேகமாய் யோசித்தான். அவனைப் பார்த்து வருமாறு அவன் சைகை காட்டிய நொடியில் ஞாபகம் வந்தது அவன் அனுவின் சித்தி பையனென்று. வேகமாய் எழுந்து அவனிடம் சென்றான். அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

"அனு அக்கா இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க" என்றபடியே அவன் கைகளில் ஒரு கடிதத்தை திணித்து விட்டு வேகமாய் ஓடி விட்டான்.

(தொடரும்...)