Thursday, September 17, 2009

கா for கா... த... ல்...



காதல்... இந்த மூணெழுத்து வார்த்தை நம்மளப் படுத்தறப் பாடு இருக்கே... அப்பப்பா... சொல்லி மாளாது... உடனே நீ இன்னும் திருந்தலையானு கேக்காதீங்க? ;) திருந்தலையானு கேக்கற அளவுக்கு அது என்ன அவ்ளோ பெரிய கொலைக்குத்தமா என்ன? ஹி... ஹி... இப்படில்லாம் கேப்பேனு நினைச்சிங்களா? வவ்வவ்வவே... நீங்க என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லயே... :P

சரி விஷயத்துக்கு வருவோம். ஆக்சுவலா இத போன போஸ்ட்ல சமீபத்திய ஃப்ளாஷ்பேக்-னு போட்டு எழுதணும்னு நினைச்சேன். அத எழுதும்போது மறந்துப் போயிட்டேன். வயசாவுதுல்ல ;)

வீட்டுல என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போய் ஹாஸ்டல்ல தள்ளிட்டார். அங்க ஒரு பட்டாளமே சேர்ந்து கும்மியடிச்சுட்டு இருந்தோம். அதுல ஒருத்திக்கு 9th படிக்கறப்ப இருந்தே லவ்வு. அதும் அவ அத்தைப் பையன் மேல. அவ அதேப் பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு பெங்களூர்ல செட்டில் ஆயிட்டா இப்போ. எங்க கேங்-ல இன்னொருத்தி இருந்தா. அவளோட அத்தைப் பையன் அவள லவ் பண்றானோனு எங்களுக்கெல்லாம் ஒரு டவுட். அவன டவுட் பண்ணியே இவ அவன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா. அதுல எங்களுக்கெல்லாம் டென்ஷன் ஆக ஆரம்பிச்சது. வேறேன்ன? எப்படியாவது இவங்கள சேத்து வைக்கணுமேன்ற கவலைதான். அதுக்கு ஃபர்ஸ்ட் அவன் இவள லவ் பண்றான்னு கன்ஃபார்ம் பண்ணனும். அவளுக்கு பொலம்பறதே வேலையாப் போச்சு. எப்பப் பாத்தாலும் கண்ணக் கசக்கிட்டே அவன் என்னை லவ் பண்றானானு தெரியலை. அவன் நோ சொல்லிட்டா அப்புறம் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேனு அவங்க செத்துப் போன பாட்டி மேலல்லாம் சத்தியம் பண்ணினா. சோ அத தெரிஞ்சுக்க உடனடியா செயல்ல இறங்கணும்னு ஒரு சனிக்கிழமை தீர்மானிச்சோம்.

அந்த 9th லவ் பொண்ணு அவ கசின்க்கு ஸ்டடி ஹாலிடேஸ். சோ இவ கசின்க்கும் கண்டிப்பா ஸ்டடி ஹாலிடேஸ் இருக்கும்னு நாங்களா முடிவுப் பண்ணிக்கிட்டோம். சரி இவள எப்படி வீட்டுக்கு அனுப்பறது? எங்க ஸ்கூல்ல பேரண்ட்ஸ் வந்து கையெழுத்துப் போட்டுதான் கூட்டிட்டுப் போகணும். வீட்டுக்குப் போறதுக்கு எதாவது ஸ்ட்ராங் ரீசன் இருக்கணும். எல்லாரும் ரவுண்டுக் கட்டி யோசிச்சோம். மஞ்சள் காமாலை வந்துடுச்சு, ஒரே நெஞ்சு வலியாவே இருக்கு - இப்டில்லாம் நான் சொன்ன நல்ல நல்ல யோசனையெல்லாம் ரிஜக்ட் பண்ணிட்டாளுங்கன்ற கோவத்துல என்னதான் சொல்லப் போறாளுங்கன்னு நானும் வேடிக்கைப் பாத்துட்டு இருந்தேன். அவளும் என்ன பண்றதுன்னே தெரியாம சோடாப்புட்டிக் கண்ணாடிக்குள்ள உருட்டி உருட்டி முழிச்சிட்டு இருந்தா. அப்போதான் அந்த இன்னொரு லவ் பண்ற பொண்ணு உன் கண்ணாடியக் கழட்டிக் கொடுடினு சொன்னா. நாங்க எல்லாம் இப்ப எதுக்கு இதக் கேக்கறானு ஆச்சர்யமாப் பாத்தோம். அத வாங்கி கண்ணாடிக்கும் கண்ணாடிய காதுல மாட்டறதுக்கு இருக்கற கம்பிக்கும் உள்ள தொடர்ப துண்டிச்சா. அட அதாங்க அது ரெண்டையும் ஜாயிண்ட் பண்ற ஸ்க்ரூவக் கழட்டினா. போய் HM-ட்ட கண்ணாடி உடைஞ்சுடுச்சுனு சொல்லி அப்பாவ வர சொல்லு. இங்கயே கடைலக் குடுத்து சரி பண்ணிக்கலாமேனு சொல்லுவார். இல்ல இப்ப பவர் செக் பண்ணி மாத்தணும்னா ஒரேடியா மாத்திட்டு வந்துடுவேன். அதே டாக்டர்ட்டதான் பாக்கணும்னு சொல்லுனு சொல்லிக் குடுத்தா. நாங்கெல்லாம் கைத் தட்டாத கொறதான். எவ்ளோ சூப்பர் ஐடியா இல்ல? ஆனா காதலிக்கறவங்களுக்குதான்பா இப்படியெல்லாம் எடக்கு முடக்கா ஐடியா எல்லாம் தோணும் ;)

நம்மாளு நேரா HM ரூமுக்கு போனா. நாங்களும் கூடவேப் போய் HM ரூமுக்கு வெளில நின்னுட்டு இருந்தோம். அவர் அவ சொன்ன மாதிரியே இங்கயேக் குடுத்து சரி பண்ணிக்கலாமேனு கேட்டார். இவ கோழி திருடுனவ மாதிரி திரு திருனு முழிச்சுட்டே இல்ல பவர் செக் பண்ணனும் அப்டினு அவ சொல்லி குடுத்த மாதிரியே உளறிக் கொட்டினா. ஹூர்ர்ரேரே... எங்க ப்ளான் சக்ஸஸ். அவ வீட்டுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லிட்டாங்க. அம்மணியும் டிப்டாப்பா கிளம்பிப் போனாங்க. நாங்க எப்படா திங்கக்கிழமை வரும். அவன் என்ன பதில் சொல்லிருப்பான்? ஆமானு ஒத்துக்கிட்டு இருப்பானோ இல்ல நோ சொல்லி இருப்பானோ. அவன் நோ சொல்லிட்டா இவ என்ன பண்ணுவா இப்படி பல விதமா யோசிச்சு ஞாயித்துக் கிழமைய நகத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

ஒரு வழியா திங்கள் கிழமை காலைல வந்து சேர்ந்தா. அவ அப்பாவுக்கு டாடா பை பை எல்லாம் சொல்லி அனுப்பி வச்சு வேகமா அவள ரூமுக்கு இழுத்துட்டு வந்து என்னடி ஆச்சுன்னு கேட்டா பெக்க பெக்கனு சிரிக்கறா. ஞாயித்துக் கிழமை எங்களுக்கு இருந்த டென்ஷன்க்கு BPயே வந்திருக்கணும். நாங்க அவ்ளோ டென்ஷனா இருக்கோம். அந்த குப்பிக் கழுதை ஊருக்குப் போய் ஆட்டுக்கால் சூப்பும் கோழி பிரியாணியும் தின்னுட்டு புதுப் படம் ரெண்டுப் பாத்துட்டு வந்துட்டேனு கூலா சொல்லுது. எல்லாம் சேர்ந்து நல்லா மொத்தி எடுத்தோம். அவனுக்கு செமஸ்டர் எக்ஸாம் நடக்குதாம். அவன் வீட்டுக்கு வரலைனு எங்கத்த சொன்னாங்க நான் என்னடிப் பண்ணட்டும்னு அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு கேட்டா. போய் தொலை. நீயுமாச்சு உன் லவ்வுமாச்சுனு விட்டுட்டோம்.

அதுக்கப்புறம் அவ லவ்வ சொல்லி அவன் ஒத்துக்காமப் போயி கடைசில ரெண்டும் சண்டைக் கட்டிக்கிட்டு திருப்ப சமாதானம் ஆகி... இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியாம வீட்டுலயேப் பேசி முடிச்சு அவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. இப்ப குழந்தைக் குட்டியோட சந்தோஷமா இருக்கா :)))

ஆனாப் பாருங்க. லவ் பண்றவங்கள விட லவ்வுக்கு ஹெல்ப் பண்றவங்க படற பாடு இருக்கே. அப்பப்பா... எனக்கு நிறைய அனுபவம் உண்டு. இது நாடோடிகள் படம் பாத்ததும் ஞாபகத்துல வந்துச்சு. இதே மாதிரி ஹெல்ப் பண்ணப் போய் பல்பு வாங்கின கதை இருந்தா ஷேர் பண்ணுங்க (அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம் ;))))

Wednesday, September 2, 2009

ச்சும்மா...

என்னத்த எழுதறதுன்னு ஒரு மண்ணும் தோண மாட்டேங்குது... சரி நம்ம லேட்டஸ்ட் சரித்திரத்த எழுதலாம்னு வந்துட்டேன். பதிவ படிக்கப் போறீங்களா? இனி உங்கள அந்த ஆண்டவனாலக் கூட காப்பாத்த முடியாது... கிகிகிகிகிகி...

சமீபத்திய சந்தோஷம்:
==========================================================

புதுசா எக்லெஸ் கேக், பிஸ்கட் புட்டிங், போலேநாத் வண்டில பாதாம் கீர்-னு விப்பாங்க இல்ல அது எல்லாம் செய்ய கத்துக்கிட்டேன். நான் செஞ்ச கேக்க எங்க ஆபிஸ்ல கொண்டு போய் குடுத்ததும் என் டீம்மேட் நல்லா இருக்கேனு கேட்டு ரெசிப்பி எல்லாம் வாங்கிட்டுப் போய் அவனும் செஞ்சுப் பாத்தான். நான் செஞ்சத விட அவன் செஞ்சது ரொம்ப சூப்பரா இருந்துச்சு. ஹி ஹி... சொல்லிக் குடுத்த நமக்கு இத விட வேற என்ன வேணும்.

சமீபத்திய துக்கம்:
==========================================================

என்ன ட்ரை பண்ணியும் அவன் செஞ்ச கேக் மாதிரி எனக்கு செய்ய வரமாட்டேங்குது. அதனால என் வீட்டுக்கார்ட்ட நம்ம வீட்டு microwave oven தான் சரி இல்லனு ஏமாத்தி வச்சிருக்கேன். ஹி ஹி...

சமீபத்திய பாராட்டு:
==========================================================

என் ஆபிஸ் நண்பரிடம் நேற்று சொன்னது:

கடுகு கருவப்பில்ல தாளிச்சு, தக்காளிய வெட்டிப் போட்டு புளியக் கரைச்சு ஊத்தி ஒரு கொதி விட்டா ரசம். இது ஒரு பெரிய வேலையா? சாதத்த மத்துப் போட்டு நல்லாஆஆஆ கடைஞ்சு அதுல பாலை ஊத்தி மறுபடியும் கட்டி விழாம நல்லாஆஆஆக் கடைஞ்சு அதுல தயிறு கொஞ்சம் ஊத்தி மறுபடியும் கட்டி விழாம நல்லாஆஆஆக் கடைஞ்சு, அதுல கொத்தமல்லி தழை வெட்டிப் போட்டு, இஞ்சி கட் பண்ணிப் போட்டு தயிர்சாதம் செய்யறது எவ்ளோ பெரிய வேலை??

அதுக்கு அவர் சொன்னது:

ஆனா பேச்சுலயே ரசம் வைக்கறது ஈஸி தயிர்சாதம் செய்யறது ரொம்ப கஷ்டம்னு அடுத்தவங்கள நம்ப வைக்க உங்களால மட்டும்தாங்க முடியும்

:))))))))))))

சமீபத்திய ஆப்பு:
==========================================================

எங்க யூனிட்ல எல்லாருக்கும் யூனிட் பேரு போட்டு கைல போட்டுக்கற பேண்ட் ஒண்ணு கொடுத்தாங்க. பெருசா இருக்கேனு கைல வச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ அங்க வந்த ஒரு நார்த் இண்டியன் ஃப்ரெண்ட் அத பிடுங்கி அவன் கைலப் போட்டுக்கிட்டான். ரெண்டு நாள் கழிச்சு அவன் கைல அத பாத்துட்டு அவன ஓட்டணும்னு நினைச்சு என்னது இது? சிங்குச்சா சிங்குச்சா மஞ்ச கலரு சிங்குச்சா-னு கேட்டேன். உடனே அவன் இத ஒரு பைத்தியம் குடுத்துச்சுனு சொன்னான். உடனே வேகமா நான் குடுக்கல-னு சொல்ல ஆரம்பிச்சேன். அவன் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். அப்போதான் நானே ஒத்துக்கிட்டேனேனு எனக்குப் புரிஞ்சது :(((( ஆக்சுவலா நான் இதக் குடுக்கல நீயாதான் பிடிங்கிக்கிட்டனு அவன ஓட்ட நினைச்சு சொல்ல ஆரம்பிச்சேன். எனக்கே ஆப்பாயிடுச்சு :(((( பாருங்க எவ்ளோ அப்பாவிப் பொண்ணு நான்...

சமீபத்திய ஃபீலிங்:
==========================================================

இப்ப அடிக்கடி இந்த FM-ல பேப்பர் வாழை இலைக்கு விளம்பரம் போடறாங்க. அதக் கேட்டாலே கோபமா வருது. வாழை இலைல சாப்பிடறது உடம்புக்கு எவ்ளோ நல்லது. விஷேசத்துக்கெல்லாம் அதப் போடாம பேப்பர் வாழை இலை வாங்கிப் போட்டா நல்லா இருக்குமா? இனிமேல் நிறையப் பேர் அத வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. யப்பா... கடைசில இலையக் கூட விட்டு வைக்க மாட்டேன்றாங்கப்பா... அதையும் ஆர்டிஃபிசியலா பண்ணிட்டாங்க...

சமீபத்திய கோபம்:
==========================================================

என் நாத்தனாரின் கணவர் ஒரு லிங்க்கைக் கொடுத்துப் பார்க்க சொன்னார். அதப் பாத்ததும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இவங்கல்லாம் மனுஷங்களா இல்ல மிருகங்களா? கண்டிப்பா மனுஷங்களா இருக்கவே முடியாது. நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க.

http://maaruthal.blogspot.com/2009/08/blog-post_29.html

சமீபத்திய சிந்தனை:
==========================================================

பாலிதின் கவர் யூஸ் பண்ணாதிங்க பண்ணாதிங்கனு எல்லாருக்கும் அட்வைஸ் பண்றத விட்டுட்டு கவர்மென்ட்டே பாலிதின் கவர் ப்ரொடக்ஷன நிறுத்தினா என்ன?!!

சமீபத்தில் ரசித்தப் பாடல்:
==========================================================

கந்தசாமி படத்துல வர எக்ஸ்கியூஸ் மி மிஸ்டர் கந்தசாமிப் பாட்டு அவ்ளோ பிடிக்குதுங்க எனக்கு. அந்த பாட்ட பாத்ததில்ல இன்னும்(அதனாலதான் பிடிக்குதோ :S) சுச்சி வாய்ஸ் அவ்ளோ சூப்பரா இருக்கு. ஸ்டார்ட்டிங்க்ல மியூஸிக் செமயா இருக்கு. என் மொபைல்க்கு அததான் ரிங்க்டோனா வச்சிருக்கேன் :)

சமீபத்தில் பார்த்த படம்:
==========================================================

சமீபத்தில் பார்க்க ஆரம்பித்த படம்னு சொல்லலாம். என்கிட்ட பேண்ட பிடுங்கின அந்த ஃப்ரெண்ட்... ப்ரெண்ட் இல்ல எனிமி... ஒரு படம் குடுத்தான். சூப்பரா இருக்கும். பாருனு. பத்தே நிமிஷம்தான் பாத்திருப்போம். ப்ரபு வேணாம்னு ஆஃப் பண்ணிட்டாங்க. அவ்ளோ கொடூரம். ஆரம்பிச்சதுல இருந்து கொலை கொலை கொலை. அதும் ரொம்ப கொடூரமா. யப்பா. எடுத்தவன் சைக்கோவா இருப்பான் போல. அந்தப் படம் பாக்கணும்னு உங்களுக்கு ஆசையா இருக்கா? "My Bloody Valentine" தான் அந்தப் படம். வீக்கெண்ட்ல பாத்து எஞ்சாய் பண்ணுங்க.

படம்னு சொல்லும்போது இத சொல்லியே ஆகனும். என் வீட்டுக்கார் எப்போப் பாத்தாலும் இங்க்லிஷ் படமேப் பாத்துட்டு இருப்பார். அடிக்கடி என் மாமியார் கடுப்பாகி தமிழ் படம் போட்டா என்னடா-னு கேட்டுட்டே இருப்பாங்க. ஒரு நாள் அவங்க அப்படி கேட்டதும் இவங்க ஒரு சூப்பர் தமிழ் படம் போட்டாங்க. அதப் பாத்ததுக்கப்புறம் என் மாமியார் தமிழ் படமே கேக்கறதில்ல. அப்படி என்ன படம்னு கேக்கறீங்களா? ஹி ஹி... நம்ம டாக்டர் நடிச்ச வில்லு படம்தான்.

சமீபத்திய ஃபோட்டோ:
==========================================================

ப்ரபுவோட கசின்ஸ் வந்திருந்தப்போ மகாபல்லிபுரம் போயிருந்தோம். அங்க அவர் தங்கச்சி ஹஸ்பெண்ட் எங்களுக்குத் தெரியாம எடுத்த ஃபோட்டோ இது :)))



ஓக்கேய்... நிறைய எழுதணும்னு நினைச்சேன். எல்லாம் மறந்துப் போயிட்டேன். சீக்கிரம் மீட் பண்ணுவோம். பை பை... :)))