"உன் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?" கேட்ட துர்காவை வித்தியாசமாய் பார்த்த மனோ
"தெரியாது" என்றான்.
"இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கறது இல்லயா?" என்று அவள் செல்லமாய் குறை சொல்லவும்
"தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போறேன்" என்று சலித்துக் கொண்டு கூறினான்.
"எனக்கு இதுல எல்லாம் ரொம்ப இண்ட்ரெஸ்ட். நான் சின்ன வயசுல சக்திய பத்தி ஒரு புக்ல படிச்சேன். அப்ப ரொம்ப ஃபீல் பண்ணினேன். எனக்கு சக்தினு பேர் வைக்கலையேன்னு. அப்புறம்தான் தெரிஞ்சது. சக்தியோட இன்னொரு பேர்தான் துர்கான்னு. தெரிஞ்சப்ப எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா?? இப்பவெல்லாம் எனக்கு ரொம்ப பெருமை. துர்கானு பேர் இருக்கறதுக்கு" என்று பெருமையாய் சொன்னாள். அதை கேட்டு ஆச்சர்யப்பட்டவன்
"பேர்ல எல்லாம் கூட இவ்ளோ விஷயம் இருக்கா?!! அப்படி என்னதான் சக்தியப் பத்திப் படிச்ச?" என்றான் ஆர்வமாய்.
"அதுவா. சிவனோட ஒரு பாதிதான் சக்தி. அது உலகத்தையே ஆட்டி வைக்கிறது. எரிசக்தி, அணுசக்தி, மின்சக்தினுதான் சொல்வாங்களே தவிர எரிசிவம், அணுசிவம், மின்சிவம்னு சொல்றதில்ல. சக்தி நினைச்சா ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். சக்திய யாராலயும் திருப்திபடுத்த முடியாது. தானா திருப்திப்பட்டுட்டாதான் உண்டு. உலகத்துல இருக்கற ஒவ்வொரு ஆணும் சிவம். ஒவ்வொரு பெண்ணும் சக்தி. ஒவ்வொரு சிவத்துக்கும் ஒரு சக்தி கண்டிப்பா இருக்கும் சரிபாதியா. எனக்கு அவர் சிவம். அவருக்கு நான் சக்தி. உனக்கு ஒரு சக்தி வருவா. அவதான் உனக்கு எல்லா சக்தியுமா இருப்பா" என்று அவள்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போக 'அவருக்கு நான் சக்தி' என்ற வார்த்தைகளில் நொறுங்கியவன் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அவள் இரு தோளைப் பற்றினான்.
"ஏன் துர்கா உன்னோட சிவமா நான் இருப்பேனு ஏன் உனக்கு தோணவே மாட்டேன்றது? என்னோட சக்தி நீதான்னு என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன். எனக்குள்ள இருந்து என்னை ஆட்டி வைக்கறது நீதானு ஏன் உனக்கு புரியலை. நீ என்னை விட்டு போயிட்டா எல்லாமே என்னை விட்டுப் போயிடும்" என்று கூறினான். அப்பொழுது தன்னை மறந்து கூறியவன் உணர்வு வர என்ன செய்வதென்று தெரியாமல் வேக வேகமாய் திரும்பி சென்றான். அவள் எவ்வித உணர்ச்சியுமின்றி அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
-------------------------------------------------------------
இரவு முழுவதும் அவளது ஃபோனுக்காக காத்திருந்தவன் அவள் ஃபோன் செய்யாமல் போகவே நினைத்து நினைத்து வருந்தியபடி விடியும் வேளையில் தூங்கிப் போனான். ஒரு பத்து மணியளவில் யாரோ அடித்து எழுப்ப திடுக்கிட்டு எழுந்தவன் துர்கா நிற்பதைக் கண்டதும் தலை வரை போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.
"டேய் நாயே! இங்க ஒருத்தி நின்னுட்டு இருக்கேன். எவ்ளோ கொழுப்பு இருந்தா இழுத்துப் போத்திட்டு தூங்குவ" என்று அவள் மீண்டும் அடிக்க ஆச்சர்யத்துடன் எழுந்தவன்
"நான் கூட என்கிட்ட பேசமாட்டேனு நினைச்சுட்டு இருந்தேன். என் மேல உனக்கு கோபம் இல்லயே??" என்று அவன் எங்கோ பார்த்தபடி கேட்க
"இதுல கோபப்பட என்னடா இருக்கு? உன் மனசுல நினைச்சத ஓபனா சொல்லிட்ட. மனசுல ஒண்ணு வச்சுக்கிட்டு வெளில இல்லாத மாதிரி நடிக்கிறதுதான் தப்பு. எனக்கு எந்த கோபமும் இல்ல"
"ஆக்சுவலா நான் மொதல்ல எல்லாம் அப்படி நினைக்கலை. எப்ப உனக்கு கல்யாணம்னு சொன்னியோ அப்பதான் நீ இல்லாம என்னால இருக்க முடியாதுனு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா உன்கிட்ட சொல்ற அளவுக்கு தைரியம் இல்ல. நேத்தே எப்படி சொன்னேனு தெரியலை"
அவள் அமைதியாய் இருக்கவே
"உன் சிச்சுவேஷன் எனக்கு புரியுது. நிச்சயம் பண்ணி அவர்தான்னு நீ இப்படி இருக்கறப்ப இப்படி நான் சொன்னது எவ்ளோ பெரிய தப்புனு எனக்கு புரியுது. ஆனா என்னால முடியல துர்கா. இதுக்கு என்ன முடிவு பண்றதுன்னும் எனக்கு புரியலை. நீதான் எப்பவும் எனக்கு எல்லா விஷயத்துலயும் Suggestion சொல்லுவ. இப்பயும் நீயே சொல்லு" என்று அவள் முகத்தையே பார்த்தான். ஒரு நிமிடம் யோசித்தவள்
"எனக்கு நீ இப்படி நினைக்க ஆரம்பிச்சவே தெரியும் மனோ. நீயாவே சொல்லுவனுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்" என்று அவள் மெதுவாய் சொல்லவும் தூக்கி வாரிப் போட நிமிர்ந்தான்.
"நீ இந்த நிமிஷம் என்ன நினைக்கறன்னு என்னால சொல்ல முடியும்னு உனக்கே தெரியும். அப்படி இருக்கும்போது உனக்குள்ள நான் வந்துட்டதக் கூட என்னால கண்டுப்பிடிக்க முடியாதுனு நினைச்சியா?" என்றபோது ஒட்டுமொத்த ஆச்சர்யமும் அவன் கண்களில் இருந்தது.
"பொண்ணுங்க எப்பவும் கூட இருக்கறவங்கள புரிஞ்சுக்குவாங்க. ஆனா பசங்களால அது முடியாது" என்று அவள் சொல்லவும்
"அப்படியெல்லாம் கிடையாது" என்று அவன் மறுத்தான். புன்னகைத்தபடி தலையைக் குனிந்தவள்
"அப்படின்னா எப்பவோ நீ எனக்குள்ள வந்துட்டத ஏன் உன்னால கண்டுபிடிக்க முடியல?" என்றாள். அவன் கண்களையே நம்ப முடியாமல் விழித்தவன் மெல்ல "துர்கா..." என்றான். அப்படியே ஜன்னல்புறமாய் திரும்பிக் கொண்டு அவள் தொடர்ந்தாள்.
"நான் எப்பயோ முடிவு பண்ணிட்டேன். முடிவு பண்ணின உடனே வீட்டுலயும் பேசி பர்மிஷன் வாங்கிட்டேன். நானா சொல்லி உனக்கு வரதை விட உனக்கும் தானா வரனும்னுதான் சொல்லாமலேயே இருந்தேன்" என்றாள்.
"அப்ப அந்த US மாப்பிள்ளை...???"
"அந்த அலையன்ஸ் வந்துச்சு. ஆனா அம்மாவுக்குதான் நான் சொல்லிட்டேன் இல்ல. அதனால சமாளிச்சு அனுப்பிட்டாங்க" என்றபடியே திரும்பியவள் அவன் முகத்தில் கோபத்தைக் கண்டதும் முகம் சுருங்கினாள்.
"என் மேல கோபமாடா?" என்று திணறினாள்.
"இவ்ளோ நாளா பொய் சொல்லி என்கிட்ட நடிச்ச இல்ல. அதுக்கு உனக்கு கண்டிப்பா பனிஷ்மெண்ட் குடுக்கப் போறேன்" என்று அவன் கோபமாய் சொல்ல அவள் முகம் பயத்தில் சுருங்கியது.
"என்ன பனிஷ்மெண்ட்?" என்று அவள் கேட்கவும் சிரித்துக் கொண்டே உதட்டில் கை வைத்துக் காட்டினான். அதைக் கண்டதும் அவள் முகம் வெட்கத்தில் சிவக்க
"அட பாவி! அவ்ளோ தைரியம் ஆயிடுச்சா உனக்கு?" என்றுக் கூறிக் கொண்டிருக்கும்போதே அவன் எழுந்து அவளை நோக்கி வர பின்னாலேயே நகர்ந்தவள்
"இன்னும் நீ ப்ரஷ் கூட பண்ணலைடா" என்றாள்.
"என்னது டாவா??? வீட்டுக்காரரை டா போட்டு சொன்னதால கணக்குல ஒண்ணு add ஆயிடுச்சு" என்று நெருங்கி வர அவள் வேகமாக திரும்பி ஓடினாள்.
"ஏய்! நில்லு. அப்புறம் உங்க அம்மாவுக்கு ஃபோன் பண்ணி அத்தை உங்க பொண்ணு சொன்ன பேச்ச கேக்கவே மாட்டேன்றானு சொல்லுவேன்" என்று அவளை துரத்தினான்.
"நீ யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ" என்றபடி அவள் வேகமாக ஓட
"நாளைக்கு புல்லட்டின் போர்டுல போடுவேன். என் காதலி எனக்கு முத்தம் குடுக்க மாட்டேனு கஞ்சத்தனம் பண்றா. சரி பரவால்லை கடையெட்டாவது வள்ளல் நானாவது தரேனு சொன்னா வாங்கிக்க மாட்டேன்றானு" என்றபடியே அவளை எட்டிப் பிடித்தான். அவள் சிணுங்க சிணுங்க.........
கட்...... கட்.......
எல்லாரும் போயி பொழப்பப் பாருங்கப்பு. கதை அம்புட்டுதான்.............
Thursday, March 15, 2007
வலி - III
Posted by
இம்சை அரசி
at
6:40 PM
25
comments
Monday, March 5, 2007
வலி - II
"நீ வர வர பண்றது எல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்ல" மனோ வேறுபக்கமாய் பார்த்தபடி சொல்ல
"என்ன பண்ணினேனாம்?" என்றாள் துர்கா கேலிக் குரலில்.
"நேத்து எவ்ளோ நேரம் ட்ரை பண்ணிட்டே இருந்தேன். வெயிட்டிங்லயே இருந்தது"
"பாத்தேன்டா. ISD கால் பேசிட்டு இருந்தேன். அதான் உன்னோடது அட்டெண்ட் பண்ணலை. சாரிடா செல்லம். கோவிச்சுக்காத"
"நீ இப்பவெல்லாம் என்னோட பேசறதே இல்ல. நான் டெய்லியும் உன்னோட கடைசியா பேசிட்டுதான தூங்குவேன். காலைலயும் எழுந்த உடனே உன்கிட்டதான் பேசுவேன்... ஆனா இப்பவெல்லாம் காலைலயும் நீ பேசறது இல்ல... " என்று அவன் அமர்ந்த குரலில் சொல்லவும்
"சாரிடா. டெய்லியும் நைட் அவர் ஃபோன் பண்றார். அவரோட day என்கிட்ட பேசிதான் ஆரம்பிக்கனும்னு ஆசையாம். அதே மாதிரி என்னொட day அவர்ட்ட பேசிதான் ஆரம்பிக்கனுமாம். அதனால காலைலயும் ஃபோன் பண்ணிடறார். நான் என்ன பண்ணட்டும்?" என்றபோது அவள் குரலில் ஒருவித நாணம் கலந்த பெருமை தெரிந்தது.
அதை கேட்டதும் அவன் முகம் சிவக்க என்ன செய்வதென்று தெரியாமல் "ஹே! என் லீட் வர சொன்னார். மறந்தே போயிட்டேன். பை" என்று பதிலுக்கு காத்திராமல் எழுந்து சென்று விட்டான்.
போகும்போது அவள் சொன்ன வார்த்தைகளே நினைவுக்கு வர 'ச்சே. இப்படி நினைக்க கூடாதுன்னு நினைச்சும் ஏன் இப்படியே தோணுது' என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவன் மனம் 'இருந்தாலும் துர்கா அவருக்கு அவர் day உன்கிட்ட பேசி ஆரம்பிக்கனும்னு ஆசைதான். ஆனா நானா ஆசைப்படாட்டியுமே என் day உன்கிட்ட பேசினாதான் ஆரம்பிக்கும்னு உனக்கு ஏன் தெரியாம போச்சு?.நீ இல்லாட்டி என் உலகமே இருண்டு போயிடுமோனு எனக்கு ரொம்ப பயமா இருக்கு' என்று எண்ணிக் கொண்டே நேராக சென்று rest room-ற்குள் நுழைந்தான். இருட்டறையில் தனியாய் மாட்டி க் கொண்டு தாயைத் தேடும் குழந்தையாய் அவன் மனம் தவிக்க முகத்தில் நன்றாக நீரை அடித்து கழுவினான்.
---------------------------------
"ஹே! உன் ஹைட் எவ்ளோடா?" choco crunch-லேயே முழு கவனமாய் கேட்ட துர்காவை மனோ கேள்வியாய் பார்க்க
"சொல்லு சீக்கிரம்" என்றபடி அவனுக்கு இணையாக மெல்ல நடந்தாள்.
"169. ஏன்?"
"169-ஆ? தேங்க் காட்" என்றவள் அவனை ஒட்டி நின்று
"உனக்கு நான் ஹைட் கரெக்டாதான இருப்பேன்?" என்று கேட்டாள். அவன் அமைதியாய் "ம்ம்ம்" என்று சொல்ல
"அவரும் 169தானாம். அப்பாடா. பயந்துட்டே இருந்தேன். ரொம்ப ஷார்ட்டா தெரிவேனோனு. கரெக்டா இருப்பேன்" என்று புன்னகையுடன் சொன்னாள்.
அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. இயலாமையில் உதடு துடிக்க பேசாமல் அமைதியாகவே வந்தான். துர்கா இது எதுவும் தெரியாமல் அவளுடைய வருங்கால கணவனைப் பற்றி பேசியபடியே வந்தாள்.
'ஹைட்ல மட்டும் இல்ல. எல்லாவிதத்துலயுமே எனக்கு நீ கரெக்டாதான் இருப்ப' என்று சொல்லிவிட இதயம் துடித்தது. என்றாலும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடுக்க அமைதியாகவே வந்தான்.
(தொடரும்...)
Posted by
இம்சை அரசி
at
8:42 PM
13
comments
Tuesday, February 27, 2007
வலி - I
'ஏன் இங்க white box error வருது?' கம்பூட்டரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மனோ அருகில் ஏதோ நிழலாட நிமிர்ந்து பார்த்தான். அவனை முறைத்துக் கொண்டு துர்கா நிற்பதைக் கண்டதும் ஆச்சர்யமானவன்
"என்ன என் ஃபேன்ஸ எல்லாம் பாக்கனும்னு வந்தியா?? எல்லாரையும் பாக்கனும்ணா உனக்கு கழுத்து வலியே வந்துடும். ஹ்ம்ம்ம். அவ்ளோ பேர் இருக்காங்க" என்றான்.
"உன் மூஞ்சிக்கு இன்னும் ஃபேன்ஸ் ஒண்ணுதான் கொறச்சல். நான் இங்க வந்து எவ்ளோ நேரமாச்சு தெரியுமா? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வா போய் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்" என்றவள் அவன் பதில் பேச வாயெடுக்கும் முன் அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.
"சொல்லுடா. எதோ முக்கியமான விஷயம்னு சொன்னியே" என்றபடியே சான்ட்விச்சை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தவன் "எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாத்துட்டாங்க" என்று அவள் சொன்னதும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நிமிர்ந்தான்.
"ஹே! நிஜமாவா சொல்ற?" என்றவன் முகத்தில் புன்னகை விரிய சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.
"எப்படியோ ஒருத்தனுக்கு ஏழரை ஆரம்பிக்கப் போகுது. யாரு அந்த அப்பாவி?? டீடெயிலா சொல்லு" என்று அவன் அவசரப்படுத்தவும் அவனை சில விநாடிகள் முறைத்தவள்
"எங்களுக்கு தூரத்து சொந்தமாம். ஜாதகமெல்லாம் ஒத்து வந்துடுச்சாம். இப்ப சிகாகோல வொர்க் பண்ணிட்டு இருக்காங்களாம். மூணு மாசத்துல இங்க வராங்களாம். கல்யாணம் முடிஞ்சதும் கூட்டிட்டு போயிடற மாதிரி எல்லாரும் ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க. எல்லாமே பேசி முடிச்சிட்டாங்க" என்று அவள் சொல்லி முடிக்கவும்
"சிகாகோ போறியா? வாவ். சிகாகோவில் சின்ன குரங்கு. இது எப்படி இருக்கு?" என்று சிரித்தான். அவள் கோவித்துக் கொண்டு எழுந்து செல்லவும் அவள் பின்னாலேயே சென்றான்.
"ஹே! விளையாட்டுக்கு சொன்னா ஏன் இப்படி கோவிச்சுக்குவ? ஃபோட்டோ பாத்தியா? பேசினியா?" என்று அவன் சமாதானமாய் கேட்டதும் அவள் முகம் சிவக்க "சும்மாயிருடா. இப்பதான பேசியிருக்காங்க. அதுக்குள்ள என்ன அவசரம்" என்று சிணுங்கினாள். அவளை கிண்டலடித்துக் கொண்டே அன்றைய பொழுது ஓடியது.
இரவு பஸ்ஸில் மனோவின் தோளில் சாய்ந்து கண்களை மூடியிருந்தவள் திடீரென்று நிமிர்ந்து "இன்னும் கொஞ்ச நாளைக்குதான இப்படி இருப்போம்" என்றவளது கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.
"உனக்கு என்ன? ஜாலியா உன் சிகாகோ மாப்பிள்ளையோட டூயட் பாடிட்டிருப்ப" என்றான்.
"நான் போனதுக்கு அப்புறம் எப்படியும் உனக்கு புது ஃப்ரெண்ட் கிடைப்பா. அதுக்கு அப்புறம் என்னை மறந்துடுவியா?" என்று அவள் கேட்டதும் சிரித்தவன்
"உன்னை எப்படி மறப்பேன். என் புது ஃப்ரெண்ட்கிட்ட குரங்கு குட்டி மாதிரி ஒண்ணு என்னை ஒட்டிட்டே அலையும்னு உன்னை பத்தி பெருமையா சொல்லுவேன்ல" என்றான்.
"அப்ப நீ என்ன எனக்கு அம்மா குரங்கா?" என்று அவள் கேட்டதும் "இல்ல நான் குரங்காட்டி" என்றான்.
"போடா. உன்னோட நான் பேசவே மாட்டேன்" என்று கோவித்துக் கொண்டு எழுந்து சென்று வேறு ஸீட்டில் உட்கார்ந்துக் கொண்டாள். மனோ அவளிடம் எதுவும் பேசவில்லை.
அன்று இரவு முழுவதும் அவனுக்கு அவள் ஞாபகமாகவே இருந்தது. அவளை முதல் முதலாய் ட்ரெயினிங்கின் போது சந்தித்தது. அங்கு அறிமுகமே இல்லாமல் நாட்கள் ஓட ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் அவன் பஸ்ஸிற்காக காத்திருந்த போது அவளாய் வந்து பேசி அவளை அழைத்து செல்லுமாறு கேட்டுக் கொண்டது. அன்று ஆரம்பித்த அவர்கள் நட்பு இருவரும் ஒரே ப்ராஜக்டில் சேர்ந்த பின் வளர்ந்து இந்த ஒரு வருடத்தில் விருட்சமாகி நிற்கிறது. எப்பொழுதும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தவர்கள் இனி பிரியப் போகும் நேரம் வந்து விட்டது என்றெண்ணும்போது அவனுக்கு ஏதோ ஒன்று அவனை விட்டு செல்வது போல தோன்றியது. தூக்கம் வராமல் புரண்டவன் அவளுக்கு ஃபோன் செய்தான். வெகு நேரம் பிஸியாக இருக்கவே வைத்து விட்டு எழுந்து வெளியே வந்தான்.
அங்கிருந்த ரோஜாத் தொட்டிகளைப் பார்த்ததும் அவனுள் ஏதோ செய்தது.
"எனக்கு ரோஸ் செடி வளத்தனும்னு ரொம்ப ஆசைடா. ஆனா வீட்ல இடமே இல்ல. PGலயும் வைக்க முடியாது. உங்க ரூம் முன்னாடி நிறையா இடம் இருக்குதான" என்று நிறைய செடிகளை வாங்கி வைத்தாள். முதல் முதலாய் பூ பூத்த போது அதை பறித்துச் சென்று அவளிடம் கொடுத்தான்.
"ஏன்டா பறிச்ச? நான் பூ வைக்க மாட்டேன். தலைல வச்சா என்னால பாக்க முடியாது இல்ல" என்று அவள் சொன்னபோது அவனுக்கு ஏதோ வித்தியாசமாய் தெரிந்தாள்.
'என்ன இது எதைப் பாத்தாலும் அவ ஞாபகமாவே வருது' என்று தலையை சிலுப்பிக் கொண்டு சென்று படுத்தான். வெகு நேரம் இப்படியே நினைத்துக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.
(தொடரும்)
Posted by
இம்சை அரசி
at
6:46 PM
26
comments

