Monday, December 24, 2007

இதயம் ரோஜா காதல் முள் - II


ஹலோ! யாருடா இவன்? இவன் பாட்டுக்கு நம்மளப் பாத்து ஹலோ சொல்றானேனு பாக்கறீங்களா? என் பேரு ஷ்யாம். செஞ்சிட்டு இருக்கற வேலை பொட்டித் தட்டற வேலை. ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்னு நிறைய தடவை ஃபீல் பண்ணி இருக்கேன். அம்மா சமையல சாப்பிட்டு அப்பா கூட செஸ் விளையாடிட்டு தங்கச்சிகிட்ட லட்டுக்கு சண்டை போடற லைஃப் இருக்கே. சுகமே சுகம். ஹ்ம்ம்ம். எல்லாத்தையும் விட்டுட்டு வரணும்னு தலைல எழுதி இருக்கு. என்ன பண்றது. நான் எங்க வீட்டோட ரொம்ப attachedங்க. வந்த புதுசுல வாரம் ஆனா வீட்டுக்கு ஓடிப் போயிடுவேன். அதுக்கப்புறம் அப்படியே ஃப்ரெண்ட்ஸ் அப்படி இப்படினு நம்ம லைஃப் இங்க செட்டாயிடுச்சு. அச்சச்சோ! உங்ககிட்ட பேசிட்டு இருந்ததுல டைம் பாக்காம விட்டுட்டேன். அஞ்சரை ஆனா டாண்னு CCDல இருக்கணும். இல்லைனா ஒரு சுனாமியே வந்துடும். ஒரு நிமிஷம் இருங்க. சிஸ்டம் லாக் பண்ணிட்டு என் ஷூ-வப் போட்டுட்டு வரேன்.

ஏன் கிளம்பறீங்க? ஒண்ணும் பிரச்சினை இல்லைங்க. நான் போயிக்கிட்டேதான் பேசறேன். நான் யாரைப் பாக்கப் போறேனு நீங்க தெரிஞ்சிக்க வேணாமா? அவதான் என்னோட அழகான ராட்சசி தெய்வா. ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி காலைல கனவுகள்ல சஞ்சரிச்சிட்டு இருந்த என்னை என் தங்கச்சிக்கிட்ட இருந்து வந்த ஃபோன் தட்டி எழுப்புச்சு. அடிச்சு புடிச்சு எடுத்துப் பேசினேன். டேய்! என் ஃப்ரெண்ட்க்கு உன் கம்பனில வேலை கிடைச்சிருக்கு. அவளுக்கு அந்த ஊருல யாரும் தெரியாது. பாஷை தெரியாத ஊருல மாட்டிக்கிட்டேனேனு புலம்பிட்டு இருந்தா. நான்தான் நீ இருக்கறனு தைரியம் சொல்லி அனுப்பி இருக்கேன். உன் நம்பர் அவட்ட குடுத்திருக்கேன். இன்னைக்கு வந்து ஜாயின் பண்றா. உனக்கு கால் பண்ணுவா. அவள ஒழுங்கா பாத்துக்கோ. உன் வாலுத்தனத்தையெல்லாம் காட்டி என் மானத்த வாங்கிடாத-னு சொல்லிட்டு என் பதில கூட கேக்காம கட் பண்ணிட்டா. சரி தங்கை சொல் மிக்க மந்திரமில்லைனு நல்ல பிள்ளையா இருக்கணும்னு உள்ளுக்குள்ள சபதம் எடுத்துக்கிட்டு(ஹி... ஹி... ச்சும்மா பில்ட் அப்பு;)) ஆபிஸ் போனேன். வேலை பிஸில அப்படியே மறந்துப் போயிட்டேன்.

ஒரு பதினோரு மணி போல மீட்டிங்ல இருந்தப்போ அனானிமஸ் கால் வந்துச்சு. யாரா இருக்கும்னு எடுத்து பேசினேன். "நா...ன்... தெய்வா". எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. இருந்தாலும் கெத்தா "மீட்டிங்ல இருக்கேன். வில் கால் யு பேக்"-னு சொல்லி வச்சிட்டேன். ஆனாலும் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்திங்க. அன்னைக்கு அப்படியே மறந்துப் போயிட்டேன். அன்னைக்கு நைட் ஃபோன் பண்ணி என் உடன்பிறப்பு சாமியாடினாப் பாருங்க. வாழ்க்கைல மறக்கவே முடியாது. அந்த பொண்ணு இப்படியா போட்டுக் குடுக்கறதுனு ஒரு சின்ன கடுப்பு. இருந்தாலும் நான் மறந்திருக்கக் கூடாதுதானு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். அதுக்கப்புறம் அவளுக்கு நல்ல ஹாஸ்டல்லா பாத்து சேர்த்து விட்டு, சிம் கார்டு வாங்கி கொடுத்து, ஊருக்கு பஸ் ஏறது எல்லாம் எங்கனு சொல்லிக் குடுத்து, சனிக்கிழமை ஷாப்பிங் கூட்டிட்டுப் போயி, ஞாயித்துக் கிழமை சும்மா வெளிய எங்கயாவது கூட்டிட்டு போன என்கிட்ட அவ நல்லா பழக ஒரு மாசம் ஆச்சு. ஒரு மாசத்துக்கப்புறம் ஆபிஸ்லயும் எங்க ப்ரேக் பாஸ்ட் டைம், லஞ்ச் டைம் ஒண்ணாச்சு. அப்புறம் சாயந்திரம் டிஃபன் டைம். அப்புறம் மொபைல்ல ஆட்-ஒன் கார்ட் போட்டு நைட்டெல்லாம் பேசி, ஆபிஸ்ல எக்ஸ்டென்ஷன், இன்டெர்னல் கம்யூனிக்கேட்டர்னு ஆகி என் வாழ்க்கை ஃபுல்லா இவ என்னோடவே இருக்கணும்னு நான் நினைக்கற அளவுக்கு ஆயிடுச்சு.

அவகிட்ட எப்படி சொல்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அதுமில்லாம அவளுக்கும் அந்த மாதிரி இருக்கோ இல்லையோனு ஒரு சின்ன... இல்ல... ரொம்பவே பெரிய சந்தேகம். அதுனால என்ன பண்றதுனு புரியாம டெய்லி நைட்டு விட்டத்தப் பாத்து யோசிச்சிட்டே இருந்த எனக்கு எந்த ஐடியாவும் தோணவே இல்ல :((( போன வாரம் ரெண்டு பேரும் ஒரு பேய்ப்படத்துக்கு போயிருந்தோம். அடிக்கடி பயந்துப் போயி என் கைய இறுக்கிப் பிடிச்சுக்கிட்டே இருந்தா. இதுக்கு முன்னாடி போனப்போ ரொம்ப தைரியமாதான் பாத்தா. இன்னைக்கு ஏன் இப்படி பயந்துக்கறானு எனக்கு ஒரே டவுட். படம் முடிஞ்சு வெளில நடந்தப்போ என் சந்தேகத்தக் கேட்டேன். அது என்னவோ தெரியலை. இப்போல்லாம் எதைப் பாத்தாலும் ரொம்ப பயமா இருக்குனு சொன்னா. எனக்கு ஒண்ணுமே புரியல. பயமா இருந்தாதானே உங்க கையப் பிடிச்சிக்க முடியும்னு சொல்லிட்டு ஒரு புன்னகைய சிதற விட்டா பாருங்க. எனக்குள்ள லட்சம் பட்டாம் பூச்சி பறந்துச்சு. இருந்தாலும் ஒண்ணும் தெரியாதவன் போல என் கையப் பிடிக்கறதுக்கு என்ன இருக்குனு கேட்டேன். சென்னைல நான் பாக்காம மிஸ் பண்ணின சுனாமிய அவ முகத்துலதான் பாத்தேன். இன்னும் என்ன விளக்கமா சொல்லணுமா? என் லைஃப் லாங்க் உங்க கையப் பிடிச்சிட்டே இருக்கணும் போதுமானு சொல்லிட்டு என்னை மொறைச்சுப் பாத்தா. அது வரைக்கும் எனக்குள்ள மொட்டு விட்டுக்கிட்டு இருந்த காதல் பூவா மலர்ந்துச்சு. பாருங்க பாருங்க. முன்னாடியெல்லாம் இப்படி பூவு, மொட்டு, பட்டாம்பூச்சினு எல்லாம் நான் பேசவே மாட்டேன். என்ன பண்றது? இந்த காதல் வந்து என்னைய இப்படி பாடாப்படுத்துது.

ரெண்டு பேர் வீட்டுலயும் ஒண்ணும் பிரச்சினை இல்ல. ஆனா என் தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி நான் இப்படி போயி நின்னா நல்லா இருக்காது இல்ல. அதான் அவளுக்கு கல்யாணம் ஆனதும் வீட்டுல இதுப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கோம். என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கூட இதைப் பத்தி சொல்லலை. அதுலயும் ரெண்டு ராட்சசிங்க இருக்காளுங்க. சொன்னா என்ன பாடுபடுத்துவாளுங்கனு தெரியலை. சரிங்க. வந்து சேர்ந்துட்டேன். இவ்ளோ தூரத்திலேயும் அவ முகத்துல இருக்கற கோபம் இங்க என்னை அடிக்குது. நான் போய் சமாதானப்படுத்தறேன். டேக் கேர். இன்னொரு நாள் பார்ப்போம். பை :)))

தொடரும்...

Thursday, December 20, 2007

கேர்ள் ஃப்ரெண்ட் எக்ஸ்-கேர்ள் ஃப்ரெண்ட் ஆனால்...


கேர்ள் ஃப்ரெண்ட்னா என்னங்க? நான் ஸ்கூல் படிக்கறப்பவும் சரி... காலேஜ் படிக்கறப்பவும் சரி. பெண் நண்பர்களை அப்படிதான் சொல்லுவோம். வேலைக்கு வந்ததுக்கப்புறம் ட்ரெயினிங்கப்போ என் க்யூபிக்கிள் மேட்கிட்ட பேசிட்டு இருந்தப்போ ரொம்ப யதேச்சையா "how many gal friends do u hav?" னு சிரிச்சிட்டே கேட்டேன். அவன் அப்படியே ஆடிப் போயிட்டான். என்னைய பாத்து ஒரு மொறை மொறைச்சுட்டு "i hav only one gal friend"னு சொன்னான். சரி பையன் பொண்ணுங்ககிட்ட அவ்வளவா பேச மாட்டான் போலனு நினைச்சுக்கிட்டு அதுக்கு மேல எதும் கேக்காம விட்டுட்டேன்.

அன்னைக்கு நைட் ரூம்ல பேசிட்டு இருந்தப்போ இந்த கதைய எடுத்து விட்டுட்டு ஏன் அவன் என்னை அப்படி மொறைச்சானு தெரியலைனு பாவமா சொன்னேன். அப்போதான் என் ஃப்ரெண்ட் சொன்னா. டேய்! இங்க எல்லாம் கேர்ள் ஃப்ரெண்டுனா லவ்வர்னு அர்த்தம்-னு சொன்னா. அப்போ பசங்க எப்படி அவங்க பெண் நண்பர்களை சொல்லுவாங்கனு நானும் அப்பாவியா கேட்டேன். அடி லூஸு! ஃப்ரெண்ட்னா ஃப்ரெண்ட். அவ்ளோதான். அது பொண்ணா பையனானு எல்லாம் விளக்கி சொல்லிட்டு இருக்க மாட்டாங்க. ஒருவேளை கேர்ள் ஃப்ரெண்ட் இல்ல பாய் ஃப்ரெண்ட்னு சொன்னாங்கன்னா அது அவங்க ஆளுனு அர்த்தம். யார்ட்டயவாது போயி எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்னு கேட்டு வாங்கி கட்டிக்காத-னு சொன்னா. என்ன உலகமடா இதுனு என்னை நானே சமாதானப்படுத்திக்க்கிட்டு அதுக்கப்புறம் அப்படி கேக்கறதையோ சொல்றதையோ விட்டுட்டேன்.

எதுக்கு இவ்ளோ கதை சொல்றேனு பாக்கறீங்களா? ஏன் லவ்வரை இப்படி சொல்றாங்கனு இப்போதான் கண்டுபிடிச்சேன்(ஹி... ஹி... கொலம்பஸ் ஆயிட்டோமாக்கும்). அந்த ரகசியத்த சேர் பண்ணிக்கதான் இந்த பதிவு. அதாவது ஒரு ஃப்ரெண்ட் பிடிக்கலைனா ஐ மீன் ஒத்து வரலைனா ஃப்ரெண்ட மாத்திடுவோம். அது போல மக்கள் எல்லாம் ஈஸியா மாத்திக்கறாங்க. சோ மீனிங் ஒண்ணுதானனு அப்படியே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எப்படி நம்ம கண்டுபிடிப்பு.

இந்த பதிவ எழுத தூண்டியது எங்க BB-ல போன வாரம் வந்த ஒரு மெயில். அந்த மெயில் உங்களுக்காக இதோ...

Hi Folks ,

I have a bag which I need to sell. It's the backpack kinds(college bag) which we can get to office daily . The quality is really good .Its an original Beheim product (trust me with its quality cos I buy only good stuff).

I bought the bag for Rs 650/- few days back . It is still unused , and the tag is also not yet removed . Interested people please call me back or mail me.

Cost Price :- Rs 650

Selling Price :- Around 250 rs

Reason for sale :- I bought it as a gift for Girlfriend's brothers Birthday , The GF has become an X-GF now. why the hell should I waste money on her brother now ???

இதுக்கு வேற நம்ம மக்கள் பதில் அனுப்பறாங்க. அதை நீயே வச்சுக்கோ. புது கேர்ள் ஃப்ரெண்டோட brother birthdayக்கு குடுக்க உதவும்னு.

இதை எங்க போயி சொல்ல?? உலகம் எங்கயோ போயிட்டு இருக்கு சாமி :))))

Saturday, December 15, 2007

இதயம் ரோஜா காதல் முள் - I


ஹாய்! எப்படி இருக்கீங்க? நானா? நான்தாங்க வினி அலைஸ் வினிதா. என் வீட்டுக்கு வினிக்குட்டி. எங்க வீடு பத்தி சொல்லணும்னா அம்மா, அப்பா, அண்ணா, நானு ஒரு அழகான கூடு. எங்கம்மாவும் அப்பாவும் எங்களை பாசத்த மட்டுமே கொட்டி கொட்டி வளத்திருக்காங்க. அவங்க மூணு பேரோட குட்டி ஏஞ்சல் நான்தான். ஹ்ம்ம்ம்ம்.... என் ஃப்ரெண்ட்ஸ்க்கு நான் வினி. என்னைப் பொறுத்த வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ் விஷயத்துல அடிச்சுக்க முடியாத அளவுக்கு அதிர்ஷ்டசாலிங்க நான். வீட்ட விட்டு வந்து தனி்யா தங்கி இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ் தயவுல வாழ்க்கை ஜாலியாவே போயிட்டு இருக்கு. என்ன பண்றது? பொட்டி தட்டறவங்க நிறைய பேர் பொழப்பு இப்படிதானே போகுது.

அதுக்கப்புறம்... இன்னொருத்தருக்கு நான் வினு டியர் :))) யெஸ். உங்க கெஸ் ரொம்ப சரி. நான் உள்ளுக்குள்ள கோட்டை மேல கோட்டை கட்டி அதுல ஒரே ஒரு சிம்மாசனம் வச்சு காலியாவே இத்தனை நாளா வச்சுட்டு இருந்தேன். அதுல எனக்கே தெரியாம அதுவும் என்னோட அனுமதி இல்லாமலே நுழைஞ்சு கம்பீரமா பெவிகால் போட்டு ஒட்டி வச்ச கணக்கா உக்காந்துக்கிட்டு இருக்கற ஷ்யாம். அவன நினைச்சாலே மனசு படபடனு அடிச்சுக்கிது :))) இது வரைக்கும் கல்யாணமா... ச்சீ... என்னால ஒரு வட்டத்துக்குள்ள எல்லாம் வாழ முடியாது... காதலா... ச்சீச்சீ... எல்லாம் சுத்த பேத்தல்... வேலை வெட்டி இல்லாதவங்க சும்மா பண்ணிட்டு திரியறது... காதலாவது கத்திரிக்காயாவதுனு பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு இருந்தவதாங்க நான். இப்போ மேடம் டோட்டல் டேமேஜ். இப்போ என்னை பாத்தா என் முகத்த வச்சே நான் எதை பத்தி பேசறேன்னு கண்டுபிடிச்சிடுவிங்க... அந்த அளவுக்கு ஆயிட்டேன்.

சரி அதை விடுங்க. அவனை எப்போ நான் பாத்தேன் தெரியுமா?? இதோ இப்ப நான் நின்னுட்டு இருக்கற இதே இடத்துல சரியா ஒரு வருஷம் நாலு மாசம் ஏழு நாள் மூணு மணி நேரத்துக்கு முன்னாடிதான் மீட் பண்ணினேன். எப்படி தெரியும்னு முழிக்காதீங்க. என்னோட காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து இந்த செகண்ட் வரைக்கும் என்னோட ஆருயிர், ஏழுயிர், எட்டுயிரா இருக்கற சுஜியோட ஸ்கூல் ஃப்ரெண்ட் அவன். இங்கதான் அவன எனக்கு சுஜி இன்ட்ரோ பண்ணி வச்சா. அந்த நாள்ல இருந்து நாங்க மூணு பேரும் மூவேந்தரா... சண்டை போட்டுக்கலைங்க... போன வாரம் வரைக்கும் ஒண்ணா சுத்திட்டு இருந்தோம். ஹ்ம்ம்ம்... ஒரே சோகம் :((( சுஜிக்கு லாஸ்ட் வீக் தான் கல்யாணம் ஆகி UK போயிட்டா. போகும்போது எனக்கு ஒரே அட்வைஸ். அந்த மோப்ப நாய் எனக்குள்ள அவன் வந்தத கெஸ் பண்ணிடுச்சு. ஆனா நம்ம ஊர் போலிஸ் டாக் மாதிரி அவளும் ஒரு அரைகொறை. அவனுக்கு வந்துடுச்சானு அவளால கெஸ் பண்ண முடியலை. ஆனா எனக்கு நல்லாவே தெரியும் அவனுக்குள்ள நான் வந்துட்டேன்னு. ஆனா சொல்லியே தொலைய மாட்டேன்றான்.

நீங்களே சொல்லுங்க. அவன்தான மொதல்ல சொல்லணும். நானா சொன்னா நல்லா இருக்காது இல்ல. அவன் வந்து சொல்லும்போது எப்படி நான் பதில் சொல்லணும்னு நிறைய யோசிச்சிட்டு இருக்கேன். மி டூன்னு சொல்லவா இல்ல நானும்னு சொல்லவா இப்படிதான். ஆனா ஒரு ஐடியாவும் தோண மாட்டென்றது :((( பேசாம கொஞ்சம் பிகு பண்ணிட்டு அப்புறம் சரி சொல்லலாமான்னு இப்பொ நினைச்சுட்டு இருக்கேன். அடடா... அவன் வந்துட்டான். சரிங்க. நாங்க இப்போ "Jab We Met" படத்துக்கு போறோம். அந்த படத்துலயாவது எனக்கு எதாவது ஐடியா கிடைக்குதானு பாக்கறேன் ;))) யார்கிட்டயும் இதை சொல்லிடாதீங்க. அய்யோ என்ன இது?? ஒரு பொண்ணோட வரான். அந்த பொண்ணு வேற இவன் கைய பிடிச்சுட்டே நடந்து வருது. எனக்கு வேற பயமா இருக்கே... நான் போய் யாருன்னு பாக்கறேன். நாம இன்னொரு நாள் பாப்போங்க. சீ யு. பை...

(தொடரும்)

பி.கு: ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.

பி.குக்கு பி.கு: ஆனால் அவர்கள் வழியை பின்பற்றாமல் அதாவது பிரதி திங்களன்று இல்லாமல் பிரதி செவ்வாயன்று வெளியிடுவேன் ;)

பி.குக்கு பி.குக்கு பி.கு: இது ஒரு மாத கதை. அதாவது நான்கு வாரங்கள் மட்டுமே. அதாவது நான்கு பகுதிகள் மட்டுமே. அய்யோ மொறைக்காதீங்க. பாவம் சின்ன பொண்ணு. பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுங்க.

தாயா? தாரமா?? - நஒக

"ஹே! பேசாம நாம தனிக் குடித்தனம் போயிட்டா என்ன?" பெட்டில் கிடந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த கவிதா நிமிர்ந்து கார்த்திக்கை முறைத்தாள்.

"கல்யாணமாயி ஒரு மாசம் கூட ஆகலை. மருமக வந்து ஒரே பையன பிரிச்சு கூட்டிட்டுப் போயிட்டானு எனக்கு பேரு வாங்கித் தரணுமா?"

"அது இல்ல டியர். அம்மா அப்பா இருக்கறதால என்னால ஃப்ரீயா என் ஆசை மனைவிய நினைச்சப்போ எல்லாம் கொஞ்ச முடியறது இல்ல" என்று அவள் இடுப்பை வளைத்துப் பிடித்து காதில் சொன்னான். அவனது கைகளை அவள் தட்டி விட

"இல்ல எல்லா எடத்துலயும் அம்மா உரிமை எடுத்துக்கும்போது உன் முகம் சுருங்குதே. நீ ஃபீல் பண்ணினா என்னால தாங்க முடியுமா சொல்லு. அதான் கேட்டேன்"

"இங்க பாருங்க. அவங்க பாசமா வளத்த பையனுக்கு திடீர்னு எதும் செய்யக் கூடாதுனு சொன்னா அவங்களுக்கு எப்படி இருக்கும். இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆயிடுவாங்க. சரியா"

"நீ ஃபீல் பண்ணலைனா ஓகே" என்று தோளை குலுக்கி விட்டு எழுந்து டைனிங் ஹாலுக்கு சென்றான்.

"கவிம்மா வந்து கார்த்திக்குக்கு டிஃபன் வை" என்ற மாமியாரின் குரலில் ஆச்சர்யமாகிப் போனவள் 'எப்போமே அவங்கதானே வைப்பாங்க' என்று எண்ணியபடியே வந்து அவனுக்கு சாப்பாடு வைத்தாள்.

கோவிலுக்கு கிளம்ப காரை கார்த்திக் வெளியில் எடுத்து வந்ததும் முன்னால் உட்காரப் போன மாமனாரைத் தடுத்து கவிதாவை முன்னால் உட்கார சொன்ன மாமியாரை இன்னும் ஒரு மடங்கு ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

கோவில் பிரகாரத்தை சுற்றி வருகையில் கவிதா அன்றைய ஆச்சரியங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு விஷமப் புன்னகையுடன் அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவன் மனம் அமைதியாய் சொன்னது

'ஹ்ம்ம்ம்... நீ இப்பதான் வந்திருக்கறதால அம்மா மேல பாசமாதான் பேசுவ... பின்னாடி உங்க ரெண்டு பேர் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்காம இருக்கறதுக்கு இதை விட வேற வழி தெரியல. அதான் இப்படி ட்ராமா பண்ணினேன். நம்ம ரூமுக்கு எதுக்கோ வந்த அம்மாவ கண்ணாடில பாத்துட்டுதான் தனிக் குடித்தனம் பத்தின பேச்சை ஆரம்பிச்சேனு உனக்கு எங்க தெரியப் போகுது'

***************************************

இது சர்வேசன் சாரோட நச்சுனு ஒரு கதை போட்டிக்காக முயற்சி செஞ்ச கதை. நச்சுனு இருக்கானு சொல்லுங்க... :)))

Wednesday, December 12, 2007

சிலிர்க்கின்றன விரல்கள்!

மார்கழிப் பனியில் நனைந்த
பறவையின் சிறகாய்
சிலிர்க்கின்றன விரல்கள்!
கீபோர்டில் உன் பெயரின்
எழுத்துக்களில் படும்போது!!

Thursday, December 6, 2007

விஜய் டிவியின் காதலிக்க நேரமில்லை பாடல்


போன வாரத்துல இருந்து "காதலிக்க நேரமில்லை"-னு ஒரு காதல் தொடர் 9 மணிக்கு விஜய் டிவில போட்டுட்டு இருக்காங்க. சீரியல் எப்படி இருக்குனு பாத்து தெரிஞ்சுக்கோங்க;) ஆனா அந்த தொடரோட டைட்டில் சாங் அட்டகாசமா இருக்கு. இசை, குரல், வரிகள்னு எல்லாமே அட்டகாசம். பாடினது யாருனு நானும் என் ஃப்ரெண்ட்ஸும் ரெண்டு நாளா உக்காந்து பாத்தோம். பேர் போடவே இல்லை :( என் தம்பி அவனுக்கு யாரோ சொன்னாங்கனு சொன்னான் இதை பாடினது super singerல செலக்ட்டான யாரோனு. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. வரிகள் இதோ...

என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கிறேன்

(என்னைத் தேடி)

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
இலையை போல் என் இதயம் தவறி விழுதே

(என்னைத் தேடி)


நல்லா இருக்கு இல்ல??? :)))

Tuesday, December 4, 2007

ஏனம்மா வளர்ந்தேன்???


கந்தலாய் கசக்கிப் போடும்
அன்றாட வாழ்வின் துயரங்களிலும்
துயரங்களை நெஞ்சில் சுமந்து
தலை தடவிய காதலிலும்
காதல் அள்ளித் தந்த
உயிர் பிரியும் வலியிலும்
வலியில் மயிலிறகாய் வருடி
ஆறுதலாய் தோள் தந்த நட்பிலும்
நட்பு நிலையில்லாத உறவாய்
பிரிந்து சென்ற வேதனைகளிலும்
குழம்பித் தவிக்கிற மனதில்
மழலையாய் உன் மடியில்
மகிழ்ந்திருந்த என் நினைவுகள்
மத்தாப்பூவாய் விரிகிறது
மழலையாகவே இருந்திருக்கலாமோ?
ஏங்கித் தவிக்கிறேன்
ஏனம்மா வளர்ந்தேன்???