Tuesday, March 15, 2011

நேஹா குட்டி கவிதைகள்!!

Mee Mee கருவறையில் பிறந்து
நாயுடு ஹாலின் நிழலில்
தவமாய் தவமிருந்த நான்
நேற்று என்னுள் இருந்து
தண்ணீரில் நீ தத்தி தத்தி
விளையாடிய பொழுதில் தான்
பிறவிப் பயனை அடைந்தேன்
                             இப்படிக்கு
         நேஹா பப்புவின் புதிய பாத்டப்

————–ooOoOOoOoo————–

கொடியில் காயும்
துணிகளின் நடுவே
என்னுடையதை மட்டும்
அடையாளம் கண்டு
அதைக் கூட கொஞ்சுகிறாய்!
உன்னைப் போல என்னைக்
கொஞ்ச இவ்வுலகில்
யாரால் தான் முடியும்?!

————–ooOoOOoOoo————–

Pappu version of ‘Baa baa black sheep’ Rhyme :)

Baa baa black sheep, have you any wool?
Yes sir, yes sir, three bags full!
One for the master, one for the dame,
And one for the little pappu who loves Mom
 

————–ooOoOOoOoo————–

உயிருள்ள கவிதை
உனக்கு முன்னால்
எனது எந்த கவிதை
அவ்வளவு அழகானதாகவோ
இல்லை சிறப்பானதாகவோ
இருந்து விடப் போகிறது?!