Monday, August 11, 2008

பாட்டு... பாட்டு... பாட்டு...

ஒரு கன்னடப் பாட்டுக்கு வரிகள் எழுதிருக்கேன். எப்படி இருக்குனு சொல்லுங்க...




-------------------------------------------------------
உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே
உன்னருகிலே உன்னருகிலே
என் இதயம் இசை மீட்டுதே

ஏனிங்கு என் உலகை உருமாற்றினாய்
எங்கெங்கும் உன் பிம்பம் தோன்றுதே
ஏனிந்த பார்வைதான் வீசிச் சென்றாய்
மனமெங்கும் புதுவித வலி தோன்றுதே

இருள் சூழ்ந்த உலகம் போல் நீதானே
எனையிங்கு முழுதாய் சூழ்ந்தாயோ
பனி விழுந்த மலர் போல் நான்தானே
ஒவ்வொரு அணுவிலும் சிலிர்த்தேனோ
என் பார்வையும் உன் மௌனமும்
போர் செய்யும் அனுதினமும்

உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே

அழகோவியம் உனை நானும் வரைந்திடத்தானே
வானவில்லின் நிறங்களும் உயிர் பெறுமே
கவிதை உனை நானும் படித்திடத்தானே
தமிழின் வார்த்தைகளும் மோட்சம் பெறுமே
உன்னிடமே வரம் கேட்கிறேன்
மௌனத்தினால் கொல்லாதே

உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே
உன்னருகிலே உன்னருகிலே
என் இதயம் இசை மீட்டுதே

ஏனிங்கு என் உலகை உருமாற்றினாய்
எங்கெங்கும் உன் பிம்பம் தோன்றுதே
ஏனிந்த பார்வைதான் வீசிச் சென்றாய்
மனமெங்கும் புதுவித வலி தோன்றுதே
-------------------------------------------------------

P.S: vl post "Unnoduthaan en jeevan - III" soon...

P.S: This is NOT a translation... Tamil lyrics is written by me :))

15 comments:

மங்களூர் சிவா said...

அம்மிணி இந்த பாட்டு புரிஞ்சதா உங்களுக்கு!

இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். பாடல் வரிகள் மிக அருமையாக இருக்கும். புனித் & ரம்யா pair ம் நல்லா இருக்கும் இதில்.

நாமக்கல் சிபி said...

//உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே
உன்னருகிலே உன்னருகிலே
என் இதயம் இசை மீட்டுதே
//

இது தமிழ் மாதிரி இருக்கே!

Sundar சுந்தர் said...

நல்ல பாடல் - அருமையா மொழி பெயர்த்திருக்கீங்க. இது போன்ற பாடல்களை சில சமயம் பெங்களுரு ரேடியோவில் கேட்ட போது உங்கள் உதவி இல்லாமல் போய் விட்டது.

மொக்கைச்சாமி said...

அட நல்லா இருக்கே. ஆமாம், உங்களுக்கு கன்னடம் தெரியாதுன்னு உங்கள் முந்தைய பதிவுகளில் படித்ததாக நியாபகம். இப்போ கத்துக்கிட்டீங்களா?

ஜியா said...

//புனித் & ரம்யா pair ம் நல்லா இருக்கும் இதில்.//

புனித்தா?? அய்யே... அப்ப சும்மா பாட்ட கேக்க மட்டும்தான் செய்யனும் போல....

CVR said...

எனக்கு முகவும் பிடித்தமான பாடல்!
நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்!! :-)

தமிழ் said...
This comment has been removed by the author.
Anonymous said...

Nice Song and Gud Try

புகழன் said...

கண்ணடம் தெரியாது.

இசைக்கேற்றார்போல் மொழியாக்கம் செய்திருப்பது நன்றாக உள்ளது.

moorthi said...

எனக்கு ரொம்ப பிடித்த கன்னட பாட்டை ஞ்யாபக படுத்தினதுக்கு
unngalunnku ரொம்ப தேங்க்ஸ் .
எனக்கு தெரிஞ்ச கன்னத்துல translate பண்ணுனா இப்படி தான் வருது :-).

உன்னாலே உன்னாலே கனவொன்று உருவகுதே
உன்னாலே உன்னாலே கனவொன்று உருவகுதே
உன்னாலே உன்னாலே என் மனசின்று துள்ளுகிறதே
உன்னாலே உன்னாலே என் மனசின்று துள்ளுகிறதே.......

Sundar சுந்தர் said...

//P.S: This is NOT a translation... Tamil lyrics is written by me :))//
sorry obviously I didnt understand all the kannada words.
well done!

மங்களூர் சிவா said...

/
ஜி said...

//புனித் & ரம்யா pair ம் நல்லா இருக்கும் இதில்.//

புனித்தா?? அய்யே... அப்ப சும்மா பாட்ட கேக்க மட்டும்தான் செய்யனும் போல....
/

ஜி நீங்க "ராகவேந்திர ராஜ்குமார்" தீவிர ரசிகர்னு தெரியும் அதுக்காக இப்பிடியா!?!?

:))))))))))))

Divyapriya said...

நாவல் ஆசிரியர்ல இருந்து பாடல் ஆசிரியரா? கலகுங்க...பாட்டு சூப்பர்.

ஜியா said...

//ஜி நீங்க "ராகவேந்திர ராஜ்குமார்" தீவிர ரசிகர்னு தெரியும் அதுக்காக இப்பிடியா!?!?//

Hello... Naangellaam... Prem & Ganeshoda theevira rasigarhalaakum... Rajkumar familyaiye seenda maatoam...

priyamudanprabu said...

கலக்கலா இருக்கு
பல நேரங்களில் என் பொழுதுபோக்கு இதுதான்
இதுவரை தமிழ் பாடல் மெட்டுக்கு நான் வரிகளை எழுதியுள்ளேன்
இந்த பாட்டுக்கும் முயர்ச்சித்து பார்க்கிறேன்
காக்க காக்க படத்தில் வரும் "ஒன்றா இரண்டா" பாடலின் மெட்டுக்கு நான் வரிகள் எழுதியுள்ளேன்
http://priyamudan-prabu.blogspot.com/2008/08/1.html
பாடல் என்னிடம் படும் பாட்டை வந்து பாருங்கள்