Thursday, July 5, 2007

அழகான பொண்ணுதான்... அதுக்கேத்த ஊருதான்...

ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாஆஆஆ.......... சும்மா வித விதமா ஆணியப் பாத்து பாத்து ஒரே கடுப்பா வருதுன்னு எங்க ரூம்ல ஒரு ரெண்டு நாளா வட்டதரை (எங்க ரூம்ல மேஜை எல்லாம் இல்லீங்க) மாநாடு போட்டு மைசூர் போயிட்டு வரலாம்னு தீர்மானம் போட்டோம். ஒரு நல்ல வெள்ளிக் கிழமை சாயந்திரம் 5 மணிக்கா எங்க புனித பயணத்த ஆரம்பிச்சோம். மைசூர்ல இருந்த எங்க ஃப்ரெண்ட் ரூம்ல தங்கி இந்த ஊர் சுத்தற வேலைய வெற்றிகரமா முடிச்சுட்டு வந்துட்டோம். எங்க எல்லாரும் ஜோரா கைதட்டுங்க பாப்போம்...... எங்க ஃப்ரெண்ட் ரொம்ப புத்திசாலி(அப்புறம் எப்படி உனக்கு ஃப்ரெண்டா இருக்கறான்னு கேக்கப்படாது). பக்காவா ப்ளான் பண்ணி ரெண்டே நாள்ல மைசூர சூப்பரா சுத்திக் காட்டினா. எங்க ப்ளான்

சனிக்கிழமை:

1. திப்பு சுல்தான் சம்மர் பேலஸ்
2. மைசூர் மஹாராஜா பேலஸ்
3. ப்ருந்தாவன் கார்டன்

ஞாயிறு:

1. சாமுண்டி ஹில்ஸ்
2. கரஞ்சி லேக்
3. எங்க ஆபிஸ்

எங்கயாவது டூர் போறவங்களுக்கு என்னோட ஒரே அட்வைஸ் என்னன்னா போற நாள் எல்லாத்துக்கும் ஃபர்ஸ்ட்டே பக்காவா ப்ளான் பண்ணிட்டு போங்க. இது வரைக்கும் அந்த மாதிரி பண்ணாம நான் எப்பவும் சொதப்புவேன். இப்போ இந்த ஃப்ரெண்டை பாத்ததும்தான் இதுலதான் இவ்ளோ சொதப்பல் ஆகுதுனு தெரிஞ்சு இனி அவள மாதிரி இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அவ்ளோ பக்காவா எல்லா எடத்துக்கும் எங்கள கூட்டிட்டுப் போனா. ஓகே. இனி ஓவர் டு மைசூர்..........

1. மைசூர் :

ஊரே ரொம்ப அழகு...... ரொம்ப சுத்தம்..... ரொம்ப அமைதி...... நாங்க போனப்ப க்ளைமேட் படு ஜோரா இருந்ததால ஒரு ஹில் ஸ்டேஷன்ல இருந்த ஒரு ஃபீல். வீடெல்லாம் வித்தியாசமா கட்டி இருந்தாங்க. எப்பேற்பட்ட வீடா இருந்தாலும் ஒரு ஓடாவது வச்சிடறாங்க. மாடி வீடுன்னா ஜன்னலுக்கு ஓடு இப்படி. அப்புறம் வாட்டர் டேங்க் எல்லாம் கீழ இருக்கற படத்துல இருக்கற மாதிரி எதாவது ஒரு டிசைன்ல. செடியோ மரமோ இல்லாத வீட நாங்க பாக்கவே இல்ல. கட்டிட வேலை ஆரம்பிக்கும்போதே செடி நாட்டுடறாங்க. ஹ்ம்ம்ம்ம்.......... அப்படியே சென்னனய நினைச்சு ஒரு பெருமூச்சு மட்டும்தான் விட முடிஞ்சது.........




2. திப்பு சுல்தான் சம்மர் பேலஸ் :

இது திப்பு சுல்தான் சம்மர் பேலஸ். ஹ்ம்ம்ம்...... சம்மர்ல போயி ரெஸ்ட் எடுக்கறதுக்கு எல்லாம் மனுஷன் என்னமா கட்டி வச்சிருக்கார். இங்க நான் ரொம்ப ரசிச்ச விஷயம் பெயிண்டிங்ஸ். ரொம்ப அழகா இருந்தது. சுத்தி இருக்கற கார்டன ரொம்ப அழகா சுத்தமா மெயின்டெயின் பண்ணிட்டு இருக்காங்க. உள்ள ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்ல :-(





3. மைசூர் மஹாராஜா பேலஸ் :

மைசூர்ல இருக்கற ரொம்ப முக்கியமான இடம் இந்த பேலஸ். உள்ள போனதும் ஆஆன்னு வாய பொளந்துக்கிட்டு பாத்த எனக்கு தோணின ஒரே விஷயம் "மனுஷன் என்னமா வாழ்ந்திருக்கார்!!!!!". இதுக்கு மேல எனக்கு சொல்ல வார்த்தையே தெரியலை. அழகுன்னா அழகு அவ்வளவு அழகு. சுவர்ல விட்டத்துல இப்படி எங்க பாத்ததலும் ஒரே பெயிண்டிங்ஸ்தான். அந்த காலத்துல போருக்கு போனது, திருவிழா நடந்தது, அரசர்கள், அரசிகள், இளவரசர்கள், இளவரசிகள் இப்படி எல்லாருடைய பெயிண்டிங்ஸ்ம் அவ்வளவு அழகா வரைஞ்சிருந்தாங்க. வரைஞ்ச ஓவியர் மட்டும் இருந்திருந்தார்னா கால்ல விழுந்து கும்பிட்டிருப்பேன். அப்புறம் ராஜா பயன்படுத்திய வாள், வேல், துப்பாக்கில இருந்து இளவரசர் விளையாண்ட சொப்பு சாமான்கள், குதிரை வண்டி, அவங்க போட்ட உடைகள், மது கிண்ணங்கள் வரைக்கும் எல்லாமே வச்சிருக்காங்க.








4. பிருந்தாவன் கார்டன்:

இதும் ரொம்ப அழகான இடம். கிருஷ்ணசாகர் அணைகிட்ட இருக்கு. இங்க டேன்ஸிங் ஃபால்ஸ்னு ஒண்ணு இருக்கு. இது ரொம்ப ஸ்பெசல். போறவங்க இதை மிஸ் பண்ணிடாதீங்க.













5. சாமுண்டி ஹில்ஸ்:

இங்க சாமுண்டீஸ்வரி கோவில் இருக்கு. ரொம்ப சக்தி வாய்ந்த சாமியாம். இந்த சாமிக்குதான் ஜெயலலிதா தங்க கிரீடம் செஞ்சு குடுத்தாங்களாம்.










6. கரஞ்சி லேக்:

ரொம்ப அமைதியான பார்க். உள்ளேயே ஏரியும் இருக்கு. மைசூர்லயே பெரிய லவ்வர்ஸ் பார்க் இதுவாதான் இருக்கும்னு நினைக்கறேன் ;)





இங்கதான் மொதல்ல மயில் தோகை விரிக்கறத நேர்ல பாத்தேன். அவ்ளோ அழகு. தோகைய சுருக்கினதுக்கு அப்புறம் கொத்தி கொத்தி அழகா அடுக்குது பாருங்க....... வாவ்.........






அன்ன பறவை இனமே அழிஞ்சிடுச்சுனு கேள்விப்பட்டேன். இங்க என்னடான்னா வெள்ளை கலர்ல கருப்பு கலர்லன்னு நிறைய இருக்கு :)



இது பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ எடுத்தது. ரொம்ப அழகா பண்ணியிருக்காங்கன்னு எடூத்தோம் :)






ஓகே................ மைசூர் சுத்தி பாத்துட்டீங்களா??

இது நம்மளோட 50வது போஸ்ட். எப்படியோ தட்டு தடுமாறி நானும் 50ஐ தொட்டுட்டேன். அதான் உங்க எல்லாருக்கும் ஃப்ரீயா மைசூர சுத்தி காட்டினேன் :)))

கைடு வேல நல்லா பண்றேனா??? ;)

42 comments:

ஜே கே | J K said...

நான் தான் ஃப்ஸ்ட்.

அப்பாடி இப்பதாங்க மொத தடவயா, மொத கமெண்ட் போடுறேன்.

ஜே கே | J K said...

50 போட்டதுக்கு வாழ்த்துக்கள் இம்சை...

ஜே கே | J K said...

படங்கள் நன்றாக இருக்கின்றன்.

ஜே கே | J K said...

அந்த தங்க கிரீடம் போட்டோ எடுக்கலையா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

//இது பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ எடுத்தது. ரொம்ப அழகா பண்ணியிருக்காங்கன்னு எடூத்தோம் //

ஆமா தங்கச்சி!கொக்கு எந்த ஊருக்கு போக பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுது:-))

CVR said...

படங்கள் எல்லாம் மிக அறுமை அக்கா!!!
செமத்தியா என்சாய் பண்ணிருக்கீங்க போல!!
கலக்குங்க!!
இதை பாத்து நான் மைசூர் போனது தான் நியாபகம் வருது!! அப்பலேர்ந்து தான் இந்த "என்ஜாய் மாடி" வார்த்தையை உபயோகிக்க ஆரம்பிச்சேன்!!!

என்ஜாய் மாடி!!!!! :-D

கதிர் said...

வாழ்த்துக்கள்

கதிர் said...

//ஆமா தங்கச்சி!கொக்கு எந்த ஊருக்கு போக பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுது:-)) //

இந்த அருமையான கேள்வியை கேட்ட அந்த அண்ணனின் மன உறுதியை பாராட்டுகிறேன். வியக்கத் தகுந்த வகையில் இந்த கேள்வி அமைந்திருப்பதாக கோபி கூட தனி மடலிட்டு கூறினார்.

அபி அப்பா!

எப்படிப்பா உங்களால மட்டும் இப்படி சிந்திக்க முடியுது??

Jazeela said...

படங்கள் அருமை. ஒரே ஒரு படத்தில் நீங்க இருப்பது புரியுது ஆனா அந்த நாலு பேருல நீங்க யாருன்னு தெரியலை. இரகசியத்தை என்னிடம் மட்டுமாவது சொல்லிடுங்க. ;-) கொடுத்து வச்ச ஆளுப்பா தோழிகளோடு ஊர்சுத்துறீங்க.

கோபிநாத் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)

இம்சை அரசி said...

// 코멘트 축소


J K 덧글 내용...
நான் தான் ஃப்ஸ்ட்.

அப்பாடி இப்பதாங்க மொத தடவயா, மொத கமெண்ட் போடுறேன்.
//

உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் ;)

// J K 덧글 내용...
50 போட்டதுக்கு வாழ்த்துக்கள் இம்சை...

J K 덧글 내용...
படங்கள் நன்றாக இருக்கின்றன்.
//

நன்றி JK :)))

// J K 덧글 내용...
அந்த தங்க கிரீடம் போட்டோ எடுக்கலையா?
//

எடுக்க அனுமதி இல்ல :(((

இம்சை அரசி said...

// முத்துலெட்சுமி 덧글 내용...
வாழ்த்துக்கள்.
//

நன்றி அக்கா :)))

இம்சை அரசி said...

// அபி அப்பா 덧글 내용...
//இது பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ எடுத்தது. ரொம்ப அழகா பண்ணியிருக்காங்கன்னு எடூத்தோம் //

ஆமா தங்கச்சி!கொக்கு எந்த ஊருக்கு போக பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுது:-))
//

grrrrrrrrr..........

அண்ணா அது கீழ உள்ள படத்துக்கு :@

அதும் இல்லாம அது கொக்கு இல்ல... அன்னம்...

இம்சை அரசி said...

// CVR 덧글 내용...
படங்கள் எல்லாம் மிக அறுமை அக்கா!!!
செமத்தியா என்சாய் பண்ணிருக்கீங்க போல!!
கலக்குங்க!!
இதை பாத்து நான் மைசூர் போனது தான் நியாபகம் வருது!! அப்பலேர்ந்து தான் இந்த "என்ஜாய் மாடி" வார்த்தையை உபயோகிக்க ஆரம்பிச்சேன்!!!

என்ஜாய் மாடி!!!!! :-D

//

ரொம்ப நன்றி அண்ணா... :)))

நாங்க அதுக்கு முன்னாடி இருந்தே உபயோகிக்க ஆரம்பிச்சிட்டோம் :)))

இம்சை அரசி said...

// தம்பி 덧글 내용...
வாழ்த்துக்கள்

//

நன்றி தம்பி அண்ணா :)))

இம்சை அரசி said...

// தம்பி 덧글 내용...
//ஆமா தங்கச்சி!கொக்கு எந்த ஊருக்கு போக பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுது:-)) //

இந்த அருமையான கேள்வியை கேட்ட அந்த அண்ணனின் மன உறுதியை பாராட்டுகிறேன். வியக்கத் தகுந்த வகையில் இந்த கேள்வி அமைந்திருப்பதாக கோபி கூட தனி மடலிட்டு கூறினார்.

அபி அப்பா!

எப்படிப்பா உங்களால மட்டும் இப்படி சிந்திக்க முடியுது??

//

grrrrrrrrrrrrrr........

இம்சை அரசி said...

// ஜெஸிலா 덧글 내용...
படங்கள் அருமை. ஒரே ஒரு படத்தில் நீங்க இருப்பது புரியுது ஆனா அந்த நாலு பேருல நீங்க யாருன்னு தெரியலை. இரகசியத்தை என்னிடம் மட்டுமாவது சொல்லிடுங்க. ;-) கொடுத்து வச்ச ஆளுப்பா தோழிகளோடு ஊர்சுத்துறீங்க.

//

அய்யோ நல்லா ஏமாந்துட்டிங்களா? நாங்க போனப்ப இது மாதிரி நிறைய கோஷ்டி வந்திருந்தது. நாங்க எடுக்கும்போது தெரியாம இதுல மாட்டிக்கிட்டாங்க :)))

இம்சை அரசி said...

// கோபிநாத் 덧글 내용...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)

//

நன்றி அண்ணா :)))

சுந்தர் / Sundar said...

50 +

Super .

Arunkumar said...

romba colourfula irukku unga 50th post... nalla guide vela paakureenga.. aduthu enga kootitu poga poringa?

Vaazthukkal for 50th post. Keep going :)

இராம்/Raam said...

யக்கோவ்,

போட்டோ எல்லாமே நல்லா இருக்கு.....

நீங்க எடுக்கலைன்னு எனக்கு நல்லாவே தெரியும்....:))

இராம்/Raam said...

பத்து படத்தை போட்டு அம்பது பதிவுகளும் போட்டுடோமின்னு முதலிலே செஞ்சது நாங்க... :))

ஜொள்ளுப்பாண்டி said...

கலக்குங்க இம்சை !! 50 பதிவு போட்டாச்சா?? :))) நல்லா என்சாய் பண்ணுங்க :))) படம் எல்லாம் சும்மா பின்னி எடுக்குது:)))

காயத்ரி சித்தார்த் said...

50 ஆ! வாழ்த்துக்கள் இம்சை.. பதிவும் நல்லா இருக்கு.. உன் டெம்ப்ளேட் அதை விட அழகா இருக்கு!!

Raajak said...

Hello Naan kuwaitla irunthu eluthuren. naanum ithupola neriya blogg padikuren. but yeathiliyum comments pottathu illa. but ithulaiyavathu comment podanumnu nenaichu poduren.
yeannoda varutham yeanna naan parkura maximum bloggers yeatho jolykaga yealuthuranga. but subjectnu parthal onnum illa. nama seiyera visayangal yeatho oru vithathil matravangaluku nallathu solurathu pola irukanum. ithupola bloggers neriya samuthaiyathuku payanulla neriya nalla visangaluku payanpaduthalam. aanal athai vittu yeatho arattai adikka mattum sila visangalai ingu share pannuranga. ithai vitutu pala nalla visayangalai ithupol share panninal ungalukum ithai padikuravangalukum payanullathaga irukum yenpathu yen karuthu.

Anonymous said...

Superb

இம்சை அரசி said...

// சுந்தர் / Sundar 덧글 내용...
50 +

Super .
//

நன்றி சுந்தர் :)))

ரொம்ப நாள் கழிச்சு எட்டி பாக்கறீங்க போல ;)

இம்சை அரசி said...

// Arunkumar 덧글 내용...
romba colourfula irukku unga 50th post... nalla guide vela paakureenga.. aduthu enga kootitu poga poringa?

Vaazthukkal for 50th post. Keep going :)
//

ரொம்ப நன்றி அருண்... அடுத்து சீக்கிரம் வேற எங்கயாவது கூட்டிட்டு போறேன். டோண்ட் வொரி :)))

இம்சை அரசி said...

// இராம் 덧글 내용...
யக்கோவ்,

போட்டோ எல்லாமே நல்லா இருக்கு.....

நீங்க எடுக்கலைன்னு எனக்கு நல்லாவே தெரியும்....:))
//

ஆரு சொன்னது??? எடுத்தது நாந்தான்... காப்பிரைட் வாங்கி வச்சிருக்கோம்ல ;)

இம்சை அரசி said...

// இராம் 덧글 내용...
பத்து படத்தை போட்டு அம்பது பதிவுகளும் போட்டுடோமின்னு முதலிலே செஞ்சது நாங்க... :))

//

யாராவது எதாவது செஞ்சுட கூடாதே... ஒடனே நாங்கதான் ஃபர்ஸ்ட்டு செஞ்சோம்னு சொல்லிக்க வேண்டியது ;)

இம்சை அரசி said...

// ஜொள்ளுப்பாண்டி 덧글 내용...
கலக்குங்க இம்சை !! 50 பதிவு போட்டாச்சா?? :))) நல்லா என்சாய் பண்ணுங்க :))) படம் எல்லாம் சும்மா பின்னி எடுக்குது:)))

//

ரொம்ப நன்றிங்க ஜொள்ஸ் :)))

ரொம்ப நாளா ஆளையே காணோம்??? ஆணி ஓவரா? ;)

இம்சை அரசி said...

// காயத்ரி 덧글 내용...
50 ஆ! வாழ்த்துக்கள் இம்சை.. பதிவும் நல்லா இருக்கு.. உன் டெம்ப்ளேட் அதை விட அழகா இருக்கு!!

//

thank u thank u...

அப்பாடி... எவ்ளோ கஷ்டப்பட்டு டிசைன் பண்ணினேன் தெரியுமா... ரொம்ப நன்றி :)))

இம்சை அரசி said...

// Raajak 덧글 내용...
Hello Naan kuwaitla irunthu eluthuren. naanum ithupola neriya blogg padikuren. but yeathiliyum comments pottathu illa. but ithulaiyavathu comment podanumnu nenaichu poduren.
yeannoda varutham yeanna naan parkura maximum bloggers yeatho jolykaga yealuthuranga. but subjectnu parthal onnum illa. nama seiyera visayangal yeatho oru vithathil matravangaluku nallathu solurathu pola irukanum. ithupola bloggers neriya samuthaiyathuku payanulla neriya nalla visangaluku payanpaduthalam. aanal athai vittu yeatho arattai adikka mattum sila visangalai ingu share pannuranga. ithai vitutu pala nalla visayangalai ithupol share panninal ungalukum ithai padikuravangalukum payanullathaga irukum yenpathu yen karuthu.
//

நீங்க சொல்றது புரியுதுங்க ராஜா... நீங்க சொல்ற மாதிரி எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. அதே மாதிரி இப்படி எழுதறத படிக்கவும் நிறைய பேர் இருக்காங்க. நாங்களும் எங்க கஷ்டத்தை எல்லாம் மறந்து ஜாலியா இருக்கறதுக்காக இப்படி எழுதறோம். hope u understand :)))

anyway thx for ur suggestion n thx a lot for ur first comment :)))

இம்சை அரசி said...

// தூயா 덧글 내용...
Superb
//

thank u தூயா :)))

MyFriend said...

poNvizhaavukku vaazthukkal akkaa.. ithu innum 1 monthleye century adikka vendum enru nenjaara vaazthukuern. naan saavagaasama vanthu padichuddu pazhaiya postskkellaam commenturen..

varddaa...
bye bye.. ;-)

ILA (a) இளா said...

Good Travelogue and congrats on 50th Post

குலவுசனப்பிரியன் said...

அடுத்தமுறை அருங்காட்சியகத்துக்கும் சென்றுவரவும். நகரப் பேருந்துநிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. ரவிவர்மாவின் புகழ்பெற்ற ஓவியங்கள் உட்பட பல அரிய கலைப் படைப்புகளை அங்கே காணலாம்.

MyFriend said...

50kku vazthukkal akka..

:-)

அய்யனார் said...

அது எல்லாம் இருக்கட்டும்.
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?

siva said...

Unga blog innaikkuthan padikkurean.
romba nalla eluthureenga.

Vazhthukkal.

Gopal said...

Excellent post, I became a great fan of your blog....