Thursday, January 11, 2007

வெறித்தனமாய் காதலிக்கிறேன்!

சில சமயங்களில்
சமத்துப் பிள்ளையாய்
சொன்னபடி செய்கிறாய்

சில சமயங்களில்
சொல் பேச்சு கேளாமல்
தடுமாற வைக்கிறாய்

சில சமயங்களில்
தலையை பிய்த்துக் கொண்டு
அலைய விடுகிறாய்

சில சமயங்களில்
எதிர்பாராத எதையேனும் செய்து
குழம்ப விடுகிறாய்

என்றாலும்
இந்த பாழாய் போன
மனம் என்னவோ
உன்னைத்தான்
வெறித்தனமாய் காதலிக்கிறது
சாஃப்ட்வேர் ப்ரோக்ராமே :)

(எப்பொழுதும் கம்ப்யூட்டரினுள்ளேயே தலையை நுழைத்துக் கொண்டிருக்கும் என் இனிய சாஃப்ட்வேர் மக்களுக்கு சமர்ப்பணம்)

35 comments:

Shruthi said...

good one :)

ஜி said...

ada.... ada... ada.... ada...

software programa kaathalikireengala... ungala maathiri aatkalthan namma companykku thevai...

[nethu vantha namma companyoda result sariyillaiyaam. ithuthaan karanamo?]

இம்சை அரசி said...

// Shruthi said...
good one :)

//

thank u Shruthi :)

அரை பிளேடு said...

யப்பா...

கடைசியா இம்ச கிட்ட இருந்து உருப்படியான கவிஜ...

கவிஞ்ஞராயிட்டீங்கோ... வாழ்த்துக்கள்.

இம்சை அரசி said...

// ஜி said...
ada.... ada... ada.... ada...

software programa kaathalikireengala... ungala maathiri aatkalthan namma companykku thevai...

[nethu vantha namma companyoda result sariyillaiyaam. ithuthaan karanamo?]
//

resultக்கு நான் காரணம்னு சொல்லறீங்களா???!!!!!!!!!

நான் இல்லப்பா..... என்னை எதாவது ஏடாகூடமா போட்டுட்றாதீங்க..... நான் எதாவது தெரியாத்தனமா சொல்லியிருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க ஜி.....

ஐயாம் தி எஸ்கேப்.......

ஜி said...

unga profile photo theriya maatenguthu... konjam sari pannungalen :)

இம்சை அரசி said...

// அரை பிளேடு said...
யப்பா...

கடைசியா இம்ச கிட்ட இருந்து உருப்படியான கவிஜ...

கவிஞ்ஞராயிட்டீங்கோ... வாழ்த்துக்கள்.

//

சாஃப்ட்வேர் மக்களுக்கு சமர்ப்பணம் சொன்ன உடனே கவிஞர் பட்டத்த தூக்கி குடுத்திட்டிங்களா????

அப்ப எப்ப என்னை எழுத்தாளர்னு ஒத்துக்குவிங்க? :))))

இம்சை அரசி said...

// ஜி said...
unga profile photo theriya maatenguthu... konjam sari pannungalen :)

//

நீங்க சொல்லிட்டா பண்ணிட வேண்டியதுதான்.......

பண்ணிடறேன் :))))

Unknown said...

ம்ம்ம்...

இம்சையரசி, இனி
கணினிக் கவிதாயினி!!!

வாழ்த்துக்கள்...

கப்பி | Kappi said...

:))

அரை பிளேடு said...

//அப்ப எப்ப என்னை எழுத்தாளர்னு ஒத்துக்குவிங்க?//

எயுத்தாளரா ? நாமளா ?

நாமெல்லாம் கண்ட மேனிக்கு பிளாக்கு ஒண்ணு மாட்டிக்கிச்சுன்னு கிறுக்கினு கீற பிளாக்கர்ஸ்...

நான் எயுத்தாளர் இல்லன்றப்ப நீங்க எயுத்தாளரா இல்லியான்றது எனக்கு எப்பிடி தெரியும்..

நாம உங்கள கவிஞர்னு சொன்னது.. சும்மா.. நிஜம்னு நினைச்சிக்காதீங்க...

யாராவது எயுத்தாளர்ங்க/கவிஞ்சர்ங்க வந்து நீங்க எயுத்தாளர்/கவிஞ்சர் அப்பிடின்னு சொன்னா எனக்கு ஆட்சேபண இல்லீங்கோ...

:)))

k4karthik said...

anti climax superngooooo...

கோபிநாத் said...

யம்மா..அரசி
எப்படி இந்த மாதிரி எல்லாம்..
கவிதை நல்லயிருந்தது...

இம்சை அரசி said...

// அருட்பெருங்கோ said...
ம்ம்ம்...

இம்சையரசி, இனி
கணினிக் கவிதாயினி!!!

வாழ்த்துக்கள்...

//

ஆஹா! என்ன காதல் கவிஞரே???
எனக்கு இப்படி ஒரு பட்டத்த கொடுத்துட்டீக??!!!!!

thanks Mr.Kadhal :))))

இம்சை அரசி said...

// கப்பி பய said...
:))

//

thank u கப்பி :)))))

உங்க visit n comment ரெண்டுக்கும் :)))))))

இம்சை அரசி said...

// அரை பிளேடு said...
//அப்ப எப்ப என்னை எழுத்தாளர்னு ஒத்துக்குவிங்க?//

எயுத்தாளரா ? நாமளா ?

நாமெல்லாம் கண்ட மேனிக்கு பிளாக்கு ஒண்ணு மாட்டிக்கிச்சுன்னு கிறுக்கினு கீற பிளாக்கர்ஸ்...

நான் எயுத்தாளர் இல்லன்றப்ப நீங்க எயுத்தாளரா இல்லியான்றது எனக்கு எப்பிடி தெரியும்..

நாம உங்கள கவிஞர்னு சொன்னது.. சும்மா.. நிஜம்னு நினைச்சிக்காதீங்க...

யாராவது எயுத்தாளர்ங்க/கவிஞ்சர்ங்க வந்து நீங்க எயுத்தாளர்/கவிஞ்சர் அப்பிடின்னு சொன்னா எனக்கு ஆட்சேபண இல்லீங்கோ...

:)))

//

அய்யோ என்னை விட்டுடுங்க. நான் ரொம்ப சின்ன பொண்ணு. ஒண்ணுந்தெரியாத அப்பாவி பொண்ணு.
இல்லாட்டி அழுதுடுவேன்........ ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

இம்சை அரசி said...

// k4karthik said...
anti climax superngooooo...

//

anti climax-ஆ???

என்னங்க இது???!!!!!!!

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
யம்மா..அரசி
எப்படி இந்த மாதிரி எல்லாம்..
//

அதுவா வருது :)))


//கவிதை நல்லயிருந்தது... //

thank u கோபிநாத் :)))

அபி அப்பா said...

இம்சை ஆன்டி, கவுஜ சூப்பரபு... இன்னிக்கு அப்பா ரொம்ப பிசி. கைப்ஸ் அங்கிள் எதோ டெஸ்ட் வச்சிருக்காங்களாம்.அதனால படிச்சிகிட்டு இருக்காங்க.so நா அப்பா கம்ப்யூட்டர்ல பூந்துட்டேன்‍‍=இப்படிக்கு அபிபாப்பா.

இம்சை அரசி said...

// Abi Appa said...
இம்சை ஆன்டி, கவுஜ சூப்பரபு... இன்னிக்கு அப்பா ரொம்ப பிசி. கைப்ஸ் அங்கிள் எதோ டெஸ்ட் வச்சிருக்காங்களாம்.அதனால படிச்சிகிட்டு இருக்காங்க.so நா அப்பா கம்ப்யூட்டர்ல பூந்துட்டேன்‍‍=இப்படிக்கு அபிபாப்பா.
//

hi அபிகுட்டி.....
how r u dear???
thank u for ur comment :)))

நீங்க டெஸ்ட்டுக்கு படிக்கலையா??
கைப்ஸ் அங்கிள் கோவிச்சுக்கப் போறார்

பிரியமுடன்... said...

இதுக்கு பெயர்தான்
தனக்கு தானே வச்சுகிட்ட ஆப்பு!
யாரு உங்களை சாப்ட்வேர் படிக்கச் சொன்னது....
யாரு உங்களை கண்னி கண்டுபிடிக்கச் சொன்னது....
யாரு உங்களை இந்த வேலைக்கு போகச் சொன்னது....
எல்லாம் நீங்களே தேடிக்கிட்டது...அப்புறம் இதையெல்லாம் அனுபவித்துதான் ஆகனும்...துட்டு....துட்டு கொட்டுதுல்ல..அப்புறம் என்ன...
இருந்தாலும் கொஞ்சம் எல்லோருக்கும் சலிப்புதான்.... கவலை படாதீர்கள்...மென் பொருளை மென்மையான பொருளாக நினனத்து கையாளுங்கள்...அது வாழ்வில் மேன்மேலும் மேன்மையைத் தரும்!
மேடம்... சொன்னது சரியா?

சுந்தர் / Sundar said...

//அருட்பெருங்கோ said...

இம்சையரசி, இனி
கணினிக் கவிதாயினி!!! //

இதை நான் வழிமொழிகிறேன்

இராம்/Raam said...

கவிஜ'யின் கடைசி வரிக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள். :)

(தாயி ஸ்மைலி போட்டு இருக்கேன்)

Arunkumar said...

first time here..
ennama kavithai ezhudi irukeenga engala maathiri potti thatravangala pathi :)

இம்சை அரசி said...

// பிரியமுடன் பிரேம் said...
இதுக்கு பெயர்தான்
தனக்கு தானே வச்சுகிட்ட ஆப்பு!
யாரு உங்களை சாப்ட்வேர் படிக்கச் சொன்னது....
யாரு உங்களை கண்னி கண்டுபிடிக்கச் சொன்னது....
யாரு உங்களை இந்த வேலைக்கு போகச் சொன்னது....
எல்லாம் நீங்களே தேடிக்கிட்டது...அப்புறம் இதையெல்லாம் அனுபவித்துதான் ஆகனும்...துட்டு....துட்டு கொட்டுதுல்ல..அப்புறம் என்ன...
இருந்தாலும் கொஞ்சம் எல்லோருக்கும் சலிப்புதான்.... கவலை படாதீர்கள்...மென் பொருளை மென்மையான பொருளாக நினனத்து கையாளுங்கள்...அது வாழ்வில் மேன்மேலும் மேன்மையைத் தரும்!
மேடம்... சொன்னது சரியா?
//

அய்யோ பிரேம்......
எப்படிப்பட்ட கஷ்டமா இருந்தாலும் மனசு software program-ஐ தான் love பண்ணுதுன்னு சொல்றேன்.

தப்பா சொல்லலை :))))

இம்சை அரசி said...

// சுந்தர் / Sundar said...
//அருட்பெருங்கோ said...

இம்சையரசி, இனி
கணினிக் கவிதாயினி!!! //

இதை நான் வழிமொழிகிறேன்

//

thk u.... thk u.... :)))

இம்சை அரசி said...

// இராம் said...
கவிஜ'யின் கடைசி வரிக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள். :)

(தாயி ஸ்மைலி போட்டு இருக்கேன்)

//

ஏனுங்க ராம் இப்படி????

இம்சை அரசி said...

// Arunkumar said...
first time here..
ennama kavithai ezhudi irukeenga engala maathiri potti thatravangala pathi :)
//

ஒரு சின்ன திருத்தம்....

எங்களை மாதிரி இல்ல.... நம்மள மாதிரி..... :)))

Anonymous said...

Manasa thottu sollunga... Kavithai yelutha try pannunale poi thana varum pola... Any way nalla karpanai... Ippadiye maintain pannitu irunga nanbare....

Kathir

இம்சை அரசி said...

// Anonymous said...
Manasa thottu sollunga... Kavithai yelutha try pannunale poi thana varum pola... Any way nalla karpanai... Ippadiye maintain pannitu irunga nanbare....

Kathir
//

இது முற்றிலும் உண்மை கதிர்...

பொய்யில்லங்க.....

Anonymous said...

Nan Nambale... But unmainu sollitinga... So nammbitaren....

Kathir

இம்சை அரசி said...

// Anonymous said...
Nan Nambale... But unmainu sollitinga... So nammbitaren....

Kathir

//

thats it....

gud boy :)))

மஞ்சூர் ராசா said...

என்றாலும்
இந்த பாழாய் போன
மனம் என்னவோ
உன்னைத்தான்
வெறித்தனமாய் காதலிக்கிறது
மென்பொருள் நிரலியே!

(எப்பொழுதும் கணினியினுள் அல்லது மடினியினுள் (laptop) தலையை நுழைத்துக்கோண்டிருக்கும் என் இனிய மென்பொருள் மக்களுக்கு சமர்ப்பணம்)

இம்சை அரசி said...

// மஞ்சூர் ராசா said...
என்றாலும்
இந்த பாழாய் போன
மனம் என்னவோ
உன்னைத்தான்
வெறித்தனமாய் காதலிக்கிறது
மென்பொருள் நிரலியே!

(எப்பொழுதும் கணினியினுள் அல்லது மடினியினுள் (laptop) தலையை நுழைத்துக்கோண்டிருக்கும் என் இனிய மென்பொருள் மக்களுக்கு சமர்ப்பணம்)
//

ஆஹா... அசத்தறீங்க...

எனக்கு இந்த அளவுக்கு வர மாட்டேன்றது. என்ன பண்ண???

Unknown said...

ippadiye kadal pannuna....yeppadi!