Thursday, December 14, 2006

என் தோழி!

நீ

என்னை பிரிந்து

சென்று விட்டாய் என்று

எண்ணி எண்ணி ஏங்க

உன் காதலி அல்ல நான்...



எனினும்

நான்

எண்ணி எண்ணி ஏங்கும்

நாம் கை கோர்த்து

திரிந்த நாட்களின்

காதலியாய் இங்கு நான்...

6 comments:

k4karthik said...

sweet one... anubavamo?

இம்சை அரசி said...

// k@rthik said...
sweet one... anubavamo?

//

நன்றி கார்த்திக்...

அனுபவம் தானே கவிதைகள்...

Unknown said...

வலுவான ந்ட்பு போலும்....அதான் இறந்த காலத்தைக் காதலிக்கிறீர்கள்...தொடரட்டும் தோழி.......

இம்சை அரசி said...

// pothihaisaaral said...
வலுவான ந்ட்பு போலும்....அதான் இறந்த காலத்தைக் காதலிக்கிறீர்கள்...தொடரட்டும் தோழி.......

//

பொண்ணுங்க நட்புன்னா அது ஒரு காலம் வரைக்கும் தான் சொல்லுவாங்க. அது மாதிரி இருக்க கூடாதுன்னு நாங்க முடிவு எடுத்து இன்னைக்கு வரைக்கும் அப்படி தான் இருக்கோம். பின்னாடி... தெரியலை... ஒரு நம்பிக்கை தான்...

Anonymous said...

நன்று..நல்ல கவிதைகளை தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள்.

உங்கள் கவிதையை படித்தவுடன்,
//பேருந்து நிறுத்தத்திலேயே நின்று
பேசிக் கொண்டிருப்பவர்கள்
நண்பர்கள்.
நிறுத்தத்திற்கு சற்றுத் தள்ளி நின்று
பேசிக் கொண்டிருப்பவர்கள்
காதலர்கள்..//

என்ற கவிதை ஞாபகம் வருகிறது.(இந்த கவிதையில் வார்த்தைகள் மாறியிருப்பதற்கு வாய்ப்புள்ளது.எனக்கு நினைவிலிருப்பதை எழுதியிருக்கிறேன்..)

இம்சை அரசி said...

// ஆழியூரான் said...
நன்று..நல்ல கவிதைகளை தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள்.

உங்கள் கவிதையை படித்தவுடன்,
//பேருந்து நிறுத்தத்திலேயே நின்று
பேசிக் கொண்டிருப்பவர்கள்
நண்பர்கள்.
நிறுத்தத்திற்கு சற்றுத் தள்ளி நின்று
பேசிக் கொண்டிருப்பவர்கள்
காதலர்கள்..//

என்ற கவிதை ஞாபகம் வருகிறது.(இந்த கவிதையில் வார்த்தைகள் மாறியிருப்பதற்கு வாய்ப்புள்ளது.எனக்கு நினைவிலிருப்பதை எழுதியிருக்கிறேன்..)

//

நன்றி ஆழியூரான்....

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.......