Tuesday, January 18, 2011

ஹையா!அஞ்சு ரூபா மிச்சம் பண்ணிட்டேனே!!

எனக்கு சின்ன வயசுல இருந்து செடி வளத்தனும்னு ரொம்ப ஆசை. ஆனா நாங்க இருந்த வீட்டுல செடி வைக்கற மாதிரி இடமே இல்ல. தொட்டி வாங்கி வைக்கலாம்மா-னு சொன்னதுக்கு அடி விழாத குறை தான்.

நாய்குட்டி வளத்தலாமானு கேட்டதுக்கும் எங்கம்மா உன்னை வச்சு சாப்பாடு போடறதே பெரிய விஷயம். இன்னும் நாய்க்குட்டி வேறயானு தடா போட்டாங்க. அதெல்லாம் முடியாது எனக்கு வேணும்னு அடம் பண்ணினதுக்கு நாய் வளத்தினா அது டெய்லி மோஷன் போகும். அடிக்கடி யூரின் போகும். அதும் கண்ட இடத்துல போய் வைக்கும். நீதான் க்ளீன் பண்ணனும். பண்றியானு கேட்டாங்க. உடனே கண்ணு முன்னாடி நாய் பப்பி ஷேம் பண்ணி வச்ச மாதிரியும் அத நான் க்ளீன் பண்ற மாதிரியும் சீன் ஓடுச்சு. உவ்வே! Yuk!!(இந்த உவ்வே, Yuk எல்லாம் இப்ப பப்புக் குட்டி துணிய துவைக்கறப்ப வரதில்ல :))) அதுக்கப்புறம் அம்மாட்ட கேட்டதே இல்ல. கல்யாணத்துக்கப்புறம் ஒரு தடவை என் பழைய ஆபிஸ்(ஆபிஸ் மாறிட்டேனாக்கும்) புல்லெட்டின் போர்டுல 'Puppies for sale' அப்படினு ஒரு போஸ்ட பாத்ததும் சின்ன வயசு ஆசை மனசுல அப்படியே லைட்டா தூக்க அத அப்படியே என் வீட்டுக்காரருக்கு ஃபார்வார்ட் பண்ணினேன் இத வாங்கலாமான்ற request-டோட. உடனே ரிப்ளை. உனக்கு தான் நான் இருக்கேனே-னு. அப்படியே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. வீட்டுக்கு போனதும் பாவமா முகத்த வச்சுக்கிட்டு அத வாங்கலாமேங்கனு கேட்டேன். அவர் அப்போதான் நான் சீரியஸா கேக்கறேனு தெரிஞ்சு வாங்கறது பெருசில்லடா. நாம அடிக்கடி ஊருக்குப் போவோம். அப்போ அத எங்க விட்டுட்டு போறதுனு கேட்டதும்தான் அவர் சொன்னது புரிஞ்சது. கஷ்டம்தான். அதோட அந்த ஆசைக்கு சமாதி கட்டியாச்சு.

அட! செடி பத்தி எழுத ஆரம்பிச்சு கடைசில ட்ராக்கு மாறி எங்கேயோ போயிட்டேன். பேக் டு த பாயிண்ட். சென்னை வந்ததும் ரோஜா செடி தொட்டி வாங்கி வைக்கணும்னு ஆசைப்பட்டேன். நாய்குட்டிக்கு சொன்ன கதையவே என் வீட்டுக்கார் சொல்லி என்னை ஆஃப் பண்ணிட்டார். ஒவ்வொரு தடவையும் எங்கத்தை சென்னை கொத்தமல்லி வாங்கறப்பவும் உரம் போட்டுடறாங்க. அதான் வாசமே இல்லாம இவ்ளோ பெருசா வளருது-னு ஃபீல் பண்றப்போ எல்லாம் நாம ஏன் கொத்தமல்லி செடி வளத்த கூடாதுனு நினைப்பேன். அது அப்படியே மறந்து போயிடும். கிறிஸ்துமஸ் டைம்ல நானும் என் வீட்டுக்காரும் மார்க்கெட் போயிருந்தோம். கொத்தமல்லி ஒரு கத்தை 10 ரூபானு சொன்னதும் எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சு. அண்ணே! என்ன இவ்ளோ விலை சொல்றீங்கனு கேட்டதுக்கு கிறிஸ்துமஸ் வந்துடுச்சு இல்ல பாப்பா (நோட் திஸ் பாயிண்ட்.. அவராதான் சொன்னாரு). எல்லாம் பிரியாணி பண்ணுவாங்க. அதான் இவ்ளோ ரேட்டுனு சொன்னார். அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் உடனடியா ஒரு தொட்டி எடுத்து வந்து புதினா தண்ட எல்லாம் நட்டு வச்சு நடுல கொத்தமல்லி போட்டு புதைச்சு வச்சேன். ஒரு மூணு நாள் கழிச்சு புதினா தழைஞ்சது. ஆனா ரெண்டு நாள்ல அது காஞ்சு போயிடுச்சு :(( அப்றமா ஒரு வாரம் கழிச்சு கொத்தமல்லி தழைய ஆரம்பிச்சுடுச்சு. டெய்லியும் ரெண்டு நேரமும் மறக்காம தண்ணி ஊத்திட்டு இருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வீட்டுக்கார்ட்ட டெய்லி நாலு தடவையாவது அஞ்சு ரூபா உங்களுக்கு மிச்சம் பண்ணிட்டேன் பாருங்கனு சொல்லிட்டே இருக்கேன். சீக்கிரம் ரோஜா செடி வாங்கணும் :)))

கீழ இருக்க படம் என்னோட கொத்தமல்லி செடிங்கதான்... கி.பி. 2007ஆம் ஆண்டு ஓசை செல்லா அண்ணா லால்பாக்ல நடத்தின ஃபோட்டோக்ராபி செஷன்ல ஃபர்ஸ்ட் பெஞ்ச்ல உக்காந்து தூங்கிட்டதால ஃபோட்டோஸ் சுமாராதான் இருக்கும் ஹி ஹி...



அடுத்து வெந்தயக் கீரை போடலாம்னு இருக்கேன் :))))

8 comments:

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர்.

சாந்தி மாரியப்பன் said...

அருமையா வளர்ந்திருக்கே..

priya.r said...

நல்ல பதிவு ! கீரையில் ஆரம்பித்து காய்கறியில் தொடர்ந்து செடி ,கொடி,மரத்தில் முடிய வாழ்த்துக்கள் !

priya.r said...

புத்தாண்டு வாழ்த்து சொல்ல மறந்துட்டேன் ஜெ !
இந்த புத்தாண்டில் உங்களிடம் இருந்து அதிக பதிவுகளை எதிர்பார்கலாம் தானே !

கோபிநாத் said...

ம்ம்ம்...கொஞ்சம் கொஞ்சமாக எல்லா செடியும் வளர்ந்து உழவர்சந்தையில வித்துடும்மா ;)))

நாகை சிவா said...

உங்களுக்குள்ள இப்படி ஒரு சமாத்தியமா???????????

நம்ப முடியவில்லை....!!!!

Thamira said...

எப்பிடி இருந்த ஆளு.. இப்பிடி குடும்பஸ்திரியாய் எழுதறதப் பாக்கச்சொல்லோ.. கண்ணுல தண்ணிவருதுபா.!

commomeega said...

நாட்டுல விக்கிற விலைவாசில நெல்லில் இருந்து அனைத்து பதார்த்தம் நாமே சொந்தமாய் விளைவித்தால்தான் இனிமே பொழைக்க முடியும் போல. நானும் விவசாயம் செய்ய போகலாம் என்று இருக்கிறேன்.
by
mcxmeega