Sunday, August 29, 2010

வா வா என் தேவதையே!!

எனக்கு வாழ்க்கைல கிடைச்ச மிகப் பெரிய ப்ரொமோஷன் மிஸ்.ஜெயராஜ்-ல இருந்து மிஸஸ்.மோகன் பிரபு-வா பதவி உயர்வு வாங்கினது. என் அன்பு கணவரோட பாசத்துக்கும் காதலுக்கும் நான் அவருக்கு எதாவது கிஃப்ட் குடுக்க வேணாமா? அதுக்காக பொத்தி பொத்தி பாதுகாத்து பத்து மாதம் எனக்குள்ளேயே வச்சிருந்து போன ஜுன் 23ஆம் தேதி நைட் 10:14க்கு அவருக்கு ஒரு குட்டி தேவதைய கிஃப்ட்டா குடுத்திருக்கேன். இந்த கிஃப்ட்டால எனக்கு மறுபடியும் இன்னொரு ப்ரொமோஷன். அம்மா-ன்ற பதவி. அந்த ஃபீலிங்ஸ் செமயா இருக்கு. அனுபவிக்க மட்டும்தான் முடியும். யாராலயும் வார்த்தைகள்ல விவரிக்க முடியாது.

பொண் குழந்தை பிறந்தா அஞ்சலி-னு பேர் வைக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனா விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரத்துல பிறந்த அவளுக்கு ந, நி, நு, நே-ல பேர் வைக்க சொன்னாங்க. நானும் பிரபுவும் நிலா-னு வைக்கலாமானு யோசிச்சோம். ஆனா எல்லாரும் வேணாம்னு சொல்லிட்டாங்க. பிரபுவோட கஸினோட பொண்ணு நிலா-னு சொன்னா எல்லாரும் moon-அ தான் பாப்பாங்க. baby-ய யாரும் பாக்க மாட்டாங்கனு சொல்லிட்டா. சரி நேஹா நல்லா இருக்குனு யோசிச்சோம். எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. இன்னும் பெஸ்ட்டா ட்ரை பண்ணலாம்னு இருந்தோம். கடைசில அது இது-னு யோசிச்சு 'நேஹா பிரபு'-னே வச்சுட்டோம்.

உடனே நீங்க எல்லாரும் ஆஹா! இம்சை இளவரசி-னு யோசிக்கறது எனக்கு நல்லாவே தெரியுது. அப்படி சொன்னிங்கனா எனக்கு கெட்ட கோபம் வரும். ஹி ஹி... இம்சை பேரரசி-னு சொல்லுங்க. அந்த அளவுக்கு மேடம் வேலை பண்ணிட்டு இருக்காங்க. நைட்டெல்லாம் தூங்கறதே இல்ல. சில நாட்கள்ல பகல்லயும் தூங்கறது இல்ல. நல்லா துரு துருனு வாலு குட்டியா வரும்னு எல்லாரும் சொல்றாங்க. எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். எவ்ளோ சுகவாசியா இருந்த. உன்ன நல்லா ட்ரில் வாங்கட்டும்னு. எங்கப்பா ஒருநாள் எங்கம்மாட்ட ஃபீல் பண்ணி சொன்னாராம். ஜெயந்தி இருந்த ஜாலிக்கு இப்போ ரொம்ப கஷ்டப்படுதுனு :((( சரி போகட்டும். என் பொண்ணுக்காகதானே.

இப்பல்லாம் நல்லா என்னையே பாக்கறா. க்யூட்டா சிரிக்கறா. இப்போ என் டைம் ஃபுல்லா அவள சுத்தியே நகருது. அவள பாத்தா எனக்கு பாட தோணற வரிகள்

"ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசைதான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம்தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான்குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் புது மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இன்ப வெள்ளி தாரகை" - (அஞ்சலி அஞ்சலி பாடலிலிருந்து)

ஓகே ஃப்ரெண்ட்ஸ். கூடிய சீக்கிரம் வேற ஒரு போஸ்ட்ல மீட் பண்ணுவோம். பை.

37 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்கப்பா ஒருநாள் எங்கம்மாட்ட ஃபீல் பண்ணி சொன்னாராம். ஜெயந்தி இருந்த ஜாலிக்கு இப்போ ரொம்ப கஷ்டப்படுதுனு :((( சரி போகட்டும். என் பொண்ணுக்காகதானே.//

செம ஃபீலிங்க்ம்மா.. :)

குட் குட் எஞ்சாய் த மொமெண்ட்ஸ்

சந்தனமுல்லை said...

Congrats to both of you! :-)

ஹுஸைனம்மா said...

என்னா ஃபீலிங்க்ஸ்!! இம்சை அரசியா இது??!!

தாய்மையின் சிறப்பே இதுதான், எப்பேர்ப்பட்டவங்களையும் பொறுப்பானவங்களா மாத்திரும்!!

எஞ்சாய் வித் நேஹா & பிரபு!!

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் குட்டி தேவதைக்கு ;)

மெனக்கெட்டு said...

வாழ்த்துக்கள்!

நல்வரவு.

மங்களூர் சிவா said...

புள்ளைய பாத்துக்காம பதிவெழுதீட்டிருக்கீங்க என்ன ஒரு வில்லித்தனம்!
:))

குட்டி பேரரசிக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
Mr. & Mrs.மங்களூர் சிவா

ஆயில்யன் said...

வாழ்த்துகள் சிஸ்டர் :)

குட்டி தேவதைக்கும் எங்களின் வாழ்த்துகள்! :)))

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..!!

அதான் இவ்வளவு லேட்டே , பதிவுலகில காணேமேன்னு நினைச்சேன்..

வல்லிசிம்ஹன் said...

இளவரசி நேஹா பிரபுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
எங்க பேத்தி பெயர் கூட நேஹாதான்.:)
இந்த நாட்களைச் சுகமாக அனுபவியுங்கள். பாப்பா ஒன்று தான் ஒர் அம்மாவின் மகிழ்ச்சியான உலகம்.

Thenral said...

Congrats Mrs.Mohan Prabhu!!!
Unga Perarasikku en vaazhthukkal!

priya.r said...

ஹரே கிருஷ்ணா
ஹாய் ஜெயந்தி
வாழ்த்துக்கள் ! ரொம்ப சந்தோசம்
குட்டி கண்மணிக்கு எங்களுது ஆசிகள்

நீங்கள் மீண்டும் பதிவுக்கு வந்தது குறித்து
வாழ்த்தி வரவேற்கிறேன்
நல்ல பகிர்வு

எம்.எம்.அப்துல்லா said...

ஹேப்பியோ ஹேப்பி :)

Anonymous said...

Dear Mrs. Jeyanthi

Very recently i accidentally entered into your blog and I felt very happy to read all your post. Your way of writing is as if you are speaking with me. Its really nice and i really enjoyed. Your blog was a medicine to my depression. It took more than a month of me to read all your post. I like each and every post you have made. I was waiting eagerly for the new post from you and once i saw that this morning in my mail i was really happy and enjoyed reading it.

All the best wishes for the Imsai Maharani as you rightly said

Regards and Love

Chitra Menon

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப நாள் கழிச்சு உங்க எழுத்தை பாக்கறதுல ரெம்ப சந்தோஷம்... அதை விட கிரேட் நியூஸ் குட்டி தேவதை வரவு... வாழ்த்துக்கள் ஜெயந்தி. உங்க ப்ளாக் படிச்சு தான் நான் ப்ளாக் ஸ்டார்ட் பண்ணினேன்... சோ ஸ்பெஷல் தேங்க்ஸ் பார் தட்... குட்டி பாப்பா போட்டோஸ் சீக்கரம் போஸ்ட் பண்ணுங்க... ஹாப்பி லாங் nights வித் நேஹா...

Thamira said...

இத்தனை நெடிய விடுப்பில் இருக்கும்போதே கணித்த விஷயம்தான்.

ஏற்கனவே ஒரு வாழ்வியல் ரசிகை நீங்கள். உங்களுக்கான அடுத்த அதுவும் உச்ச ரசனைக்கான விஷயம் இது. அனுபவியுங்கள். வாழ்த்துகள்.

இந்த போஸ்டிலும் உங்கள் உணர்வுகள் அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. மகிழ்ச்சி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய இளவரசி வாசம்! :)
வாழ்த்துக்கள் ஜெயந்தி & பிரபு!

//இம்சை இளவரசி-னு யோசிக்கறது எனக்கு நல்லாவே தெரியுது. அப்படி சொன்னிங்கனா எனக்கு கெட்ட கோபம் வரும்//

இம்சை இளவரசி
இம்சை இளவரசி
இம்சை இளவரசி

இப்போ கோவப்படுங்க பார்ப்போம்! பட்டா, இளவரசி பூம்பிஞ்சு வெள்ளிச் சரி-கை நகத்தால் உங்க மூஞ்சியில் பஞ்ச்சர் ஒட்டிருவா! :)
இனி மேலாச்சும் அடக்கமா இருக்க, அம்மாக்குச் சொல்லிக் கொடும்மா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Btw...Neha is a Nice Name!
Neha! Neha!!
நேஹா நேஹா, நீயில்லாமல் வாழ்வது லேசா
நேஹா நேஹா, நீண்டகால உறவிது லேசா
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே!!

நான் வாங்கும் மூச்சு காற்றும் உனதல்லவா!
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா!
நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய
ஒரு வரியில் ஒருவரின் உயிர் கரைய
உடனடியாய் உதடுகளால் உயிலெழுது!!

இந்தப் பாட்டு கூடப் பொருத்தமாத் தான் இருக்கு! :))

சரி சரி, எதைத் தாலாட்டாப் பாடறீங்க-ன்னு அடுத்த போஸ்ட் போடுங்க! :)

Anisha Yunus said...

வாங்க மேடம்..,

உங்க வலைப்பூவை படிச்சபின்புதான் நானே எழுத ஆரம்பிச்சேன்... வலைப்பூவில சேர்ந்ததுமே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்....ஆனா இவ்வளவு நாளா உங்க வலைப்பூவில அப்டேட்டே இல்லன்னவுடனே ஒரு ஏமாற்றம்!! அட அதற்கு ஒரு அழகிய காரணம் இருக்குன்னு தெரிஞ்சப்புறம் சந்தோஷம்...இனிமே இம்சை அரசியா? இல்ல இம்சை அம்மாவா?
கலக்குங்க!! வாழ்த்துக்கள்!!

GK said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...
இளவரசிக்கு எனது அன்பைத் தெரிவியுங்கள்..
இளவரசியின் புகைப்படம் இருந்தால் பகிரவும் :)

வலைப்பதிவில் மீண்டும் உங்களைக் கண்டத்தில் மகிழ்ச்சி :)

Anonymous said...

valthukkal akka.

by
mcxmeega@gmail.com

இம்சை அரசி said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்கப்பா ஒருநாள் எங்கம்மாட்ட ஃபீல் பண்ணி சொன்னாராம். ஜெயந்தி இருந்த ஜாலிக்கு இப்போ ரொம்ப கஷ்டப்படுதுனு :((( சரி போகட்டும். என் பொண்ணுக்காகதானே.//

செம ஃபீலிங்க்ம்மா.. :)

குட் குட் எஞ்சாய் த மொமெண்ட்ஸ்
//

ஹி ஹி... எஞ்சாயிங் எஞ்சாயிங்...

இம்சை அரசி said...

// சந்தனமுல்லை said...

Congrats to both of you! :-)
//

தேங்க்ஸ் அக்கா :)))

இம்சை அரசி said...

// Blogger ஹுஸைனம்மா said...

என்னா ஃபீலிங்க்ஸ்!! இம்சை அரசியா இது??!!

தாய்மையின் சிறப்பே இதுதான், எப்பேர்ப்பட்டவங்களையும் பொறுப்பானவங்களா மாத்திரும்!!

எஞ்சாய் வித் நேஹா & பிரபு!!
//

நன்றி நன்றி... :)))

இம்சை அரசி said...

// கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் குட்டி தேவதைக்கு ;)
//

தேங்க்ஸ் அண்ணா :)))

இம்சை அரசி said...

// Blogger மெனக்கெட்டு said...

வாழ்த்துக்கள்!

நல்வரவு.
//

நன்றி அண்ணா :)))

இம்சை அரசி said...

// மங்களூர் சிவா said...

புள்ளைய பாத்துக்காம பதிவெழுதீட்டிருக்கீங்க என்ன ஒரு வில்லித்தனம்!
:))

குட்டி பேரரசிக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
Mr. & Mrs.மங்களூர் சிவா
//

நன்றி Mr. & Mrs.மங்களூர் சிவா :)))

இம்சை அரசி said...

// ஆயில்யன் said...

வாழ்த்துகள் சிஸ்டர் :)

குட்டி தேவதைக்கும் எங்களின் வாழ்த்துகள்! :)))

//

நன்றி அண்ணா :)))

இம்சை அரசி said...

// Blogger ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..!!

அதான் இவ்வளவு லேட்டே , பதிவுலகில காணேமேன்னு நினைச்சேன்..

//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெய்லானி :))

இம்சை அரசி said...

// வல்லிசிம்ஹன் said...

இளவரசி நேஹா பிரபுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
எங்க பேத்தி பெயர் கூட நேஹாதான்.:)
இந்த நாட்களைச் சுகமாக அனுபவியுங்கள். பாப்பா ஒன்று தான் ஒர் அம்மாவின் மகிழ்ச்சியான உலகம்.
//

தேங்க்ஸ் அம்மா :)))

நேஹா பேபிய ரொம்ப கேட்டதா சொல்லுங்க

இம்சை அரசி said...

// Thenral said...

Congrats Mrs.Mohan Prabhu!!!
Unga Perarasikku en vaazhthukkal!
//

Thanks Mam :))

இம்சை அரசி said...

// priya.r said...

ஹரே கிருஷ்ணா
ஹாய் ஜெயந்தி
வாழ்த்துக்கள் ! ரொம்ப சந்தோசம்
குட்டி கண்மணிக்கு எங்களுது ஆசிகள்

நீங்கள் மீண்டும் பதிவுக்கு வந்தது குறித்து
வாழ்த்தி வரவேற்கிறேன்
நல்ல பகிர்வு
//

மிக்க நன்றி ப்ரியா :)))

இம்சை அரசி said...

// எம்.எம்.அப்துல்லா said...

ஹேப்பியோ ஹேப்பி :)
//

:))))))))))

இம்சை அரசி said...

// எம்.எம்.அப்துல்லா said...

ஹேப்பியோ ஹேப்பி :)
//

:))))))))))

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Congrats and Best wishes to Neha.. :)

gk said...

great u r back..
i would like to say just wat chithra menon said,
accidentally came into ur blog, great writing.. i was waiting for u to come back.. congrats on ur great news..

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் நேஹாக்கும், தம்பதியினருக்கும்..என் மகன் நகுல்ராம் பிறந்ததும் இதே நட்சத்திரம், ராசி..நல்லா படிப்பாங்க..புத்திசாலியா இருப்பாங்க..

தமிழ்க்காதலி said...

ஹாய் இம்ஸ்.... ( இம்சை அரசிக்கு பெற நேம் பா........)

என் பொண்ணு ஸ்ரீஜனனி @ அஞ்சனா வும் அனுஷா நட்சத்திரம் விருச்சிக ராசி .........சரியான வாலு.......

நேஹா குட்டிக்கு என் அன்பு முத்தங்கள் .....

அன்புடன்

சங்கரி