Tuesday, March 15, 2011

நேஹா குட்டி கவிதைகள்!!

Mee Mee கருவறையில் பிறந்து
நாயுடு ஹாலின் நிழலில்
தவமாய் தவமிருந்த நான்
நேற்று என்னுள் இருந்து
தண்ணீரில் நீ தத்தி தத்தி
விளையாடிய பொழுதில் தான்
பிறவிப் பயனை அடைந்தேன்
                             இப்படிக்கு
         நேஹா பப்புவின் புதிய பாத்டப்

————–ooOoOOoOoo————–

கொடியில் காயும்
துணிகளின் நடுவே
என்னுடையதை மட்டும்
அடையாளம் கண்டு
அதைக் கூட கொஞ்சுகிறாய்!
உன்னைப் போல என்னைக்
கொஞ்ச இவ்வுலகில்
யாரால் தான் முடியும்?!

————–ooOoOOoOoo————–

Pappu version of ‘Baa baa black sheep’ Rhyme :)

Baa baa black sheep, have you any wool?
Yes sir, yes sir, three bags full!
One for the master, one for the dame,
And one for the little pappu who loves Mom
 

————–ooOoOOoOoo————–

உயிருள்ள கவிதை
உனக்கு முன்னால்
எனது எந்த கவிதை
அவ்வளவு அழகானதாகவோ
இல்லை சிறப்பானதாகவோ
இருந்து விடப் போகிறது?!

15 comments:

ஜெய்லானி said...

முதல் இரெண்டும் டாப் அடுத்த இரெண்டும் சூப்பர் :-)

ILA (a) இளா said...

//என்னுடையதை மட்டும்
அடையாளம் //
அடடா.. தாய்மை :)

கோபிநாத் said...

;) அருமை ;)

அபி அப்பா said...

\\three bags full!
One for the master,\\ ஆகா நேகாபப்பு மாமாவுக்கு ஒரு ஃபுல் தரக்கூடாதா?:-))

சமுத்ரா said...

All are nice..

Anonymous said...

அருமை!!!
வாழ்க்கையை ரசனையோடு வாழ்கிறீர்கள்!!

Anonymous said...

அருமை!!!
வாழ்க்கையை ரசனையோடு வாழ்கிறீர்கள்!!

Anisha Yunus said...

வாவ்...!!

பொண்ணு உங்களை கவிப்பேரரசி ஆக்கிடுவா போலிருக்கே?? என்சாய்!!!!

:)

Unknown said...

ithu verum kavithaigal alla jay..
unnudaya unarvugalaga therigirathu....

sasirekha said...

Wow.. excellent writings, keep going with much more.:)

Arul Kumar P அருள் குமார் P said...

//உயிருள்ள கவிதை
உனக்கு முன்னால்
எனது எந்த கவிதை
அவ்வளவு அழகானதாகவோ
இல்லை சிறப்பானதாகவோ
இருந்து விடப் போகிறது?!//


இந்த கடைசி கவிதை நச்சுனு இருந்துச்சு . குமுதத்துல ஒரு முறை அரசு பதில்களில் ஒரு கேள்வி வந்தது ( 15 வருடம் முன்பு )

" ஒரு வரியில் கவிதை சொல்ல முடியுமா ?"

பதில் : " குழந்தை "

அப்போ பதில் நச்சுனு இருக்கு என்று பீல் பண்ணினேன் . அதற்க்கு பின்பு இந்த கவிதையை தான் அப்படி நினைக்க தோணியது.

இராஜராஜேஸ்வரி said...

தாய்மை தொனிக்கும் கவிதை வ்ரிகள்
அருமை.

ரசிகன் said...

//நீ தத்தி தத்தி
விளையாடிய பொழுதில் தான்
பிறவிப் பயனை அடைந்தேன்
இப்படிக்கு
நேஹா பப்புவின் புதிய பாத்டப்//

பாத்டப்புக்கும் பிறவிப்பயனா? அவ்வ்வ்வ்வ்வ்

அருமை:)

shakti said...

Last One is Very Very nice, I like It

rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்.. www.rishvan.com