Thursday, February 24, 2011

முத்தம் சிந்தும் நேரம்!

அவசர அவசரமாய்
நீ பறக்க விட்டுச் செல்லும்
ஒற்றை முத்தத்திற்காக
இரு கன்னங்களும் சண்டையிட
வெற்றிப் பெருமிதத்தில்
புன்னகைக்கின்றன
திருட்டுத்தனமாய்
அபகரித்துக் கொண்ட இதழ்கள்!

:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x


அழகிய சங்கீதம் போல்
வண்டுகள் ரீங்காரமிடும்
ஒரு ரம்மியமான இரவில்
காமத்தின் நெடியினூடே
சுகந்தமாய் மணம்
பரப்பி செல்கிறது நீ
காதலுடன் நெற்றியில் தந்த
ஒற்றை முத்தம்!

:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x

முதல் முத்தம் பற்றிய பேச்சில்
உரிமைதான் என்றாலும்
ஏதோ தவறு செய்வது போல்
படபடத்த இதயம் தான்
நினைவில் உள்ளது என்று
முடிப்பதற்குள் முத்தமிட்டு
கிறங்கியிருக்கும் என்னை
தட்டி எழுப்பி சிரிக்கிறாய்
அந்த முதல் முத்ததின் தித்திப்பை
என் இதயக் கூட்டில்
பதுக்கி  வைத்திருப்பதை அறியாமல்...





9 comments:

கத்தார் சீனு said...

அருமை....அழகு கவிதைகள் ...
வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

முதல் முத்தம் அழகு கவிதை இம்சை

சி.பி.செந்தில்குமார் said...

சாரி , போன கமெண்ட்ல இம்சை என்ற வார்த்தைல்லு முன் ஒரு கமா சேர்க்கவும். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

உங்களை 198 பேர் ஃபாலோ பண்றாங்க.. அட்லீஸ்ட் நீங்க 50 பிளாக்காவது ஃபாலோ பண்ண வேணாமா? ஹி ஹி

FunScribbler said...

பின்னிட்டீங்க போங்க!!:))))

அன்புடன் நான் said...

இம்சிக்காத.... அழகிய முத்தம்....

Dinesh C said...

:) Kaadhalum azhagu kavidhaiyum azhagu!

Dinesh C said...

kaadhalum azhagu.. kavidhaiyum azhagu

sasirekha said...

Wow.. Its simply superb :)