Thursday, November 30, 2006

மறந்து விடாதே!!!

உன் புன்னகையை
பேனாவில் ஊற்றி
என் வாழ்க்கை ஏடுகளை
நிரப்புகிறேன்
அன்பே!
புன்னகைக்க மறந்து விடாதே!

தவம்




உன் பாதங்கள் படவே
தவம் கிடக்கின்றன
என்
வீட்டு வாசலில்
உதிர்ந்திருக்கும் பூக்கள்!!!

எப்படி முடிகிறது?

எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்?
உன் இதயதிலிருக்கும்
எனக்கும் சேர்த்து
இரண்டிரண்டு முறை
சுவாசிக்க???!!!

என்ன செய்ய?

உன் விரல் பிடித்து
நடை பயில
ஆசை தான்...
என்ன செய்ய?
உன்னை காணுமுன்னே
நடை பழகிவிட்டேனே!!!